வேறு.
|
|
|
|
இலக்கணை
நீதி மன்றத் தியற்கையு மியலு நீதிப்
புலக்கணைக் கெடுக்க நின்ற புல்லறப் பகையின் போக்கும்
நிலக்கணக் காயு நீதி நிலவுநா ளென்கொ லாமென்
றலக்கணுற் றருணி தானி யமலனைப் பரவிச் சொல்வான்.
|
40 |
|
|
இந்நகர்க்
கரசே ஜீவர்க் கிகபர சாத னந்தான்
பொன்னகர்க் கரச னுய்த்த பொதுவிதி விலக்கத் தோடு
மன்னில வுலகத் தாட்சி மறுதலைத் தெனின்வை தீகச்
சென்னெறிக் குதவா தென்னச் செப்பிய துண்மை தேர்தி.
|
41 |
|
|
உத்தம
தேவ பத்திக் குயிர்விசு வாச மாகும்
அத்தகு விசுவா சத்துக் கருளுயி ரருள்வந் தெய்த
மெய்த்தொழும் புரிமை யாகு மெய்த்தொழும் பாவ தெம்மான்
சித்தத்துக் கமையுஞ் செவ்வி சித்தத்தைத் தெரிக்கும் வேதம்.
|
42 |
|
|
திருவச
னத்துக் கொவ்வாத் தெய்விக வழிப்பா டெல்லாம்
பெருவழி பிடித்துச் செல்லும் பிரபஞ்சச் சேட்டை பேசின்
அருவருப் பாகுந் தேவ சித்தத்துக் காத லாலே
பொருவரு நித்திய ஜீவன் பொருந்தாதென் றதுவு முண்மை.
|
43 |
|
|
இந்நகர்க்
கரசு மேவற் பரிசனர் குடிகள் யாரும்
பன்னரு மலபா தாலப் படுகர்புக் குறைவா ரன்றி
உன்னத பதத்தெம் மோடு மொருங்குபே ரின்பந் துய்த்து
மன்னுதற் குரிய ரல்ல ரென்றது மறாத வுண்மை.
|
44 |
|
|
சத்தியம்
வினவி னார்க்குச் சாற்றிய விவற்றைத் தானே
வித்தரித் துரைத்தே னிந்த மெய்மைதூ ஷணமாங் கொல்லோ
இத்தகு முபநி யாசத் தேதொரு தவறுண் டென்னின்
உத்தம நியாயங் காட்டி பொறுத்திட றரும மென்றான்.
|
45 |
|
|
நடுவிகந்
தொருபாற் கோடி நச்சர வென்னச் சீறிப்
படுபொரு ளுணரா னாய பாதகப் பசாசன் முன்னர்
வடுவறு நிதானி நின்று வழக்கிடு மரபை யோரின்
தொடுகட லுலக வேந்தன் றுரும்பன்றோ துறவிக் கம்மா.
|
46 |
|
|
திருக்கிளர்
ஞானச் செல்வன் செப்பிய சிதைவின் மாற்றம்
உருக்கிய செம்பி னாகிச் செவிவழி யுருவிப் புக்குக்
கருக்கிய சிந்தை யாள னறப்பகை கதங்கொண் டொல்லை
பொருக்கென வுரறிப் பொங்கி யினையன புகல லுற்றான்.
|
47
|