பக்கம் எண் :

388

தோமறு குணநி யாய துரந்தர ரேயிந் நின்ற
பாமரற் கெதிர்வி ரோதம் பகர்ந்தமெய்ச் சான்றும் பின்னர்
வேமெரிக் கிடையே யிட்ட விறகென விரகொன் றில்லான்
கோமகற் கிழிவு காட்டிக் கூறிய கூற்றுங் கேட்டீர்.

48
 
ஆதிதொட் டலகை ராஜ பரம்பரை யவனிக் குய்த்த
நீதியின் செயலு மிந்த நீணில வழக்குக் கொத்த
ஜாதியுஞ் சமயா சாரக் கொள்கையுந் தழுவி நின்ற
காதையு மாய்ந்து தீர்வை கழறுத லழகிற் றாமால்.
49
 
பண்டெங்க ளரசற் கேவற் பணிபுரி பார்வோ னென்னுஞ்
சண்டனெம் மதவி ரோத தகுவராண் சிசுவை யெல்லாந்
தெண்டிரை யாற்றிற் பெய்து ஜீவனை வதைத்த செய்கை
மண்டல மறியு மிந்த மரபைநீர் மறந்தி டாதீர்.
50
 
நீணிலத் தரசு செய்த நேபுகாத் நேச்சர் காலத்
தாணவச் சிலையைப் போற்றா தழிபுற மதத்தர் தம்மைக்
கோணைவெந் நெருப்புச் சூளை குளித்திட வெறிந்த கொற்றஞ்
சேணுறப் புகுந்தும் பாரிற் றிகரந்தமட் டுலாய தின்னும்.
51
 
தடங்கட லுலகம் போற்றத் தனிக்குடை நிழற்றி யாண்ட
மடங்கலே றனைய கொற்ற மன்னவன் றரியு வாணைக்
கடங்கிடா மதவி ரோத வழிம்பனைப் பிணித்து வெய்ய
முடங்குளை வயவெஞ் சீய முழையிடைப் படுத்த தோர்மின்.
52
 
இத்தகு பிரமா ணங்க ளெவற்றையு மீறி யாங்கள்
பத்திசெய் மார்க்கத் துள்ள பழுதெலாம் பரக்கத் தூற்றி
வித்தக நினைவால் வாக்காற் கிரியையால் விரோதஞ் செய்யுங்
குத்திரக் கலகி ராஜ துரோகியிக் கொடியன் காண்டிர்.
53
 
ஏதமில் சான்றுக் கொத்த திங்கிவன் வாக்கு மூலம்
மேதையீ ரங்கை நெல்லிக் கனியென விளங்கிற் றெல்லாம்
ஆதலாற் குற்ற வாளி யென்பதற் கைய மின்றால்
ஓதுதிர் பேதி யாதும் முட்கருத் தென்றான் வெய்யோன்.
54
 
கிள்ளைக்கு நீதி பூஞை கிளந்திடக் கேட்டல் போலும்
புள்ளிமான் மறிக்கு நீதி புலிசொல வினவல் போலுந்
தெள்ளிய நிதானி சீர்மை தெரிந்துரைத் திடுக வென்றான்
உள்ளறப் பகைபொல் லாங்கி னுருப்புணர் நடுவர் தம்மை.
55