|
நன்றெனத்
துணிந்தீ ராறு நடுவரு நடுவி னீதி
மன்றொரு சூழ லுற்று மடமதச் செருக்கு விஞ்சிப்
புன்றலைப் புலமைச் சூழ்ச்சி தத்தமிற் பொருந்தி வாளாக்
கொன்றிடத் துணிந்து நீதா சனிக்கிது கூற லுற்றார்.
|
56 |
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
எண்ணில்து
ரோகம், பண்ணிய பதிதன்
திண்ணமி தென்னாக், கண்ணிலி சொன்னான். |
57 |
|
|
|
|
இன்றிவ
னைத்தான், கொன்றுயிர் கோடி
என்றுது ணிந்தே, நன்றிலி விண்டான்.
|
58 |
|
|
|
|
கடியன்மு
கத்தைப், படியில கற்ற
நொடியினி தென்றான், கொடியகு ரோதி.
|
59 |
|
|
|
|
குறித்திவன்
குற்றம், பொறுத்திட லாகா
ஒறுத்திடு கென்றான், கறுத்திடு காமி.
|
60 |
|
|
|
|
நாணிலி
சிந்தை, கோணிகு லீனன்
பேணலை யென்னா, வீணன்விவ ரித்தான்.
|
61 |
|
|
|
|
பிணியொடு
மித்துர்க், குணிதலை கொய்யப்
பணிதரு கென்றான், துணிகர னென்பான்.
|
62 |
|
|
|
|
நீசனி
வன்காற், காசுபெ றானென்
யோசனை யென்றான், மாசுறு வம்பன்.
|
63 |
|
|
|
|
துரியநி
லத்துக், குரியவ னிவனை
அரிசிர மென்றான், பெரியவி ரோதி.
|
64 |
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
மித்திர
பேதம்வி ளைத்த, குத்திர னைக்கொலை செய்ய
எத்தனை யோசனை யென்றான், சத்துரு வாயச ழக்கன்.
|
65 |
|
|
|
|
வென்றிந
டுப்புரி வீர, இன்றிவ னைக்கழு வேற்றிப்
பொன்றவ தைப்பினும் போதா, தென்றுநிட் டூரனி சைத்தான்.
|
66 |
|
|
|
|
மாநில
முற்றும யக்கி, ஆனிவி ளைக்கும ழிம்பன்
மேனிசி தைக்கென விண்டான், ஈனனி ருட்பிரிய னென்பான்.
|
67 |
|
|
|
|
சத்திய
மென்றுரை தந்த, அத்தனை யும்பொய்ய பத்தம்
எத்தனை விட்டிட லென்றான், புத்தியி லாமுழுப் பொய்யன்.
|
68 |