|
வேறு.
|
|
|
|
|
|
இன்னண
நடுவர்பன் னிருவரு மொழிய
என்னொரு துணிபுமற் றிதுவென நுவலா
அன்னிலை பழுதக லறவனை யெதிர்கூய்ப்
பன்னின னறப்பகை படுகொலைத் தீர்ப்பு.
|
69 |
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
படுபொருளைத்
தெரித்தியென வினவுதலிற் பரமார்த்த
வடுவறுநன் னிலையுரைத்த மாதவற்குக் கொலைத்தீர்ப்பு
நடுவிகந்து நவிற்றினவா னாசமுறு நடுமன்றங்
கொடுமையினுங் கொடுமையிது குவலயத்திக் கொடுங்கோன்மை. |
70 |
|
|
|
|
குற்றவா
ளியைப்பிணித்துக் கொலைத்தொழிலர் களத்துய்க்க
மற்றிவனைத் தளைபூட்டிச் சிறைச்சாலை மடுத்திடுக
கொற்றவனா ணையினென்று கூறினான் கொடுங்கோன்மைப்
பெற்றியெலா நிலைநிறுத்தும் பிணக்குடைய குணக்கேடன்.
|
71
|
|
|
|
|
சொன்னவுரை
முடியாமுன் சுருதிநூல் வலவனைக்கொண்
டந்நியமர் சிறைச்சாலை யடைவிக்க வருந்தவனைக்
கொன்னுனைவாள் வயவீரர் கொலைக்களத்துக் கொடுசென்று
மன்னவனா ணையைப்புரிந்து தெரித்தாரம் மறவனுக்கே.
|
72 |
|
|
|
|
கொலைத்தீர்வைக்
கொடுங்கூற்றங் குறுகிவெருட் டிடுபொழுதும்
அலைத்தீர்த்து விசித்தியாக்கை யரிந்தழலிற் பெய்பொழுதுஞ்
சிலைத்துமில னொருமாற்றம ஜேசுதிரு வடித்தொழும்பின்
நிலைத்தருமங் கடைப்பிடித்து நித்தியஜீ வனைக்கருதி.
|
73 |
|
|
|
|
புற்புதநீ
ருடற்பொறையைப் பூதூளி யிடைவிழுத்தி
அற்புதமெய் விசுவாசி யான்மநித்தி யானந்த
சிற்பரம ராஜ்ஜியத்தின் ஜேசுதிரு வடிநீழற்
பொற்புறவீற் றிருந்ததுவாற் புத்தேளிர் கணமுவப்ப.
|
74 |
|
|
|
|
அஞ்ஞான
விருளடைந்த வகத்தேமெய் யொளியலர
மெய்ஞ்ஞான விசுவாச விளக்கேற்றி யணையாது
பொய்ஞ்ஞானப் பொறிசெறித்துப் புகருலகம் புகுமட்டும்
சுஞ்ஞான நிலைகாக்குந் தூயாவி நலம்வாழி.
|
75 |
|
|
|
|
நிதானி
கதிகூடு படலம் முற்றிற்று.
நிதானபருவம்
கவி, 803.
|
|