|
பொய்தி
ருட்டநி யாயம்பொ றாமைபொல் லாங்கு
கைத வந்தந்தி ரங்கொடுஞ் சூதுவன் கண்மை
வெய்தி னாயவி னைத்திற முள்ளன வேட்டுச்
செய்து தீவிடம் ஜீவனுக் கீட்டினை தீயோய்.
|
14 |
|
|
|
|
தூய
ஞானஞ்சு கிர்தஞ்சு சீலமி வற்றால்
ஆய செல்வம் டைந்திலை யாலநி கர்க்கும்
மாய சூனிய வஞ்சக வர்த்தகம் பேணித்
தீய செல்வந்தி ருந்தினை சிந்தனை யில்லாய்.
|
15 |
|
|
|
|
வஞ்ச
மாதிய துர்க்குண மேமனை மக்கள்
பஞ்ச பாதக மாதிபஞ் சாமிர்த பானம்
விஞ்சு பொய்முத லாயவை மெய்யணி சாந்தம்
அஞ்சு கின்றிலை தீமடி பேணுதி யந்தோ.
|
16 |
|
|
|
|
முன்னம்
வேதியர் பன்முறை மோசத்தைக் காட்டிச்
சொன்ன நன்மதி கொள்ளலை தூயநல் லாவி
உன்ன கத்துமல் லாடிய தோர்கிலை யொன்றாம்
என்னை யும்பகை யாக்கினை யேமதி யில்லாய்.
|
17 |
|
|
|
|
ஈண்டு
தொண்டனுக் கீட்டிய விம்சையும் யாக்கை
கீண்ட ரிந்தழ லுக்கிரை யாக்கிய கேடுங்
காண்ட லிற்கவல் கிற்றிசின் னாட்படக் காணாய்
மூண்ட வித்தகு சிந்தனை காணுவை மோசம்.
|
18 |
|
|
|
|
இற்றி
தோரலை நீரெழுத் தியாக்கையென் றெண்ணாய்
சுற்ற நட்புரி மைத்திறம் யாவுநிற் சூழ்ந்து
பற்று மாயவ லைத்தொட ரென்பதும் பாராய்
நிற்றி மோசப்ப டுகரி னூனெறி நேராய்.
|
19 |
|
|
|
|
உள்ளி
னாயவு ணர்ச்சிமற் றுன்னத ராஜன்
நள்ளி ரக்ஷணி நல்கிடு நல்லடை யாளம்
வள்ள லாரருண் மல்கிய மாண்புறு வைகல்
எள்ளு வாயலை யீதுன்னி ரக்ஷணை நன்னாள்.
|
20 |
|
|
|
|
நிண்ண
யந்தெரி ரக்ஷணி யநவ நீதம்
உண்ணி லாத்தும தாபித நோயொருங் கோடும்
நண்ணு மெய்ப்பர மானந்த சிற்சுக நம்பி
புண்ணி யன்பொற்றி ருவடிச் சூழலிற் போதி.
|
21 |