|
எந்தை
சொற்றதே யமையுமா யினுமெனக் கினிநீ
தந்தை யானுனக் கொருசிறு தனையனாந் தயைகூர்
அந்த ணாளநீ யென்னெஜ மாநன்யா னடியன்
சொந்த நிற்கெனப் பகர்ந்தனன் றூயநம் பிக்கை.
|
22 |
|
|
|
|
எள்ள
ருங்குணத் திருவரு மிவ்வண மாக
நள்ளி ரக்ஷணை நலவழி பிடித்துட னடந்தார்
தெள்ளு ஞானமு முணர்ச்சியுஞ் சேர்ந்தன வனையார்
உள்ளு மெய்விசு வாசமு மொழுக்கமு மொப்பார்.
|
23 |
|
|
|
|
ஊன்மு
திர்ந்துவீ ழுடற்சுக போகத்தை யுவர்த்துத்
தேன்மு கந்துணும் வண்டெனச் சிந்தனைக் கினிய
நூன்மு கந்தெடுத் தநுபவ முதிர்ச்சியை நோக்கி
ஆன்ம ஞானசம் பாஷணை யருந்தியே குவரால்.
|
24 |
|
|
|
|
இருவ
ரிப்பரி சேகுழி யகந்தையி னிறுமாந்
தொருவன் வெள்ளிய செருப்படி யுண்டவ னுலவி
வருவ தாகிய செயலறிந் தருந்தவ மறையோன்
திருவி னாயுனைத் தெரியுமா றிவைதெரிக் கென்னா. |
25 |
|
|
|
|
எங்கு
ளாய்பெய ரென்கொலா மெத்தொழி லுடையை
மங்க லம்புனை மனைமகா ருளர்கொலோ மரபின்
நுங்கு லத்தவர் யாரெங்கு சேறியுன் னோக்கென்
சங்கை தீர்விடை தருகென வினவினான் சதுரன்.
|
26
|
|
|
|
|
கேட்டி
யுத்தரங் கிளக்குவல் கிளர்பெருஞ் செல்வம்
ஈட்டு மிச்சக தேசமே யென்ஜெந்ம தேசம்
நாட்டி னுள்ளவர் தன்னய னெனவொரு நாமஞ்
சூட்டி னார்தொழி லெவ்வகை யினும்பொரு டொகுத்தல்.
|
27 |
|
|
|
|
போலி
யென்றொரு துரைச்சியின் புத்திரி காமி
தாலி கட்டிய மனையவ டனையருல் லாச
வாலி பக்குணத் தாலெனை மதிக்கிலர் மனையாள்
சீல மும்பலர் காமிக்கு நடையுடைச் செல்வி.
|
28 |
|
|
|
|
இச்ச
கன்சம ரசனிரு முகனிவ ரென்றாய்
மச்ச ரைக்குடன் விறந்தவ ரவர்க்கியான் மருகன்
குச்சி தன்பக்க மாறிவீண் குதர்க்கிடாம் பீகன்
நச்சு வாக்கியா தியரெமர் நனிநிதி படைத்தோர்.
|
29 |