|
தூய
ஞானத்துக் குழவியுஞ் சொல்லுமற் றிதுபோல்
மேய வோர்பதி னாயிரங் கேள்விக்கு விடையெம்
நாய கன்னெனை நாடுதி ரற்புத நயந்தன் றேய
வுண்டியா லென்றதை யேழைகா ணினைமின்.
|
62 |
|
|
|
|
உண்டி
யாலுல கத்தினுக் குரியசம் பத்தாற்
பெண்டி ராற்பெரும் புகழ்ச்சியை விரும்புபேய்க் குணத்தாற்
கொண்ட பத்தியின் கோலத்தைக் குவலய நகைக்கும்
அண்டர் நாயக னருவருப் பாரிதை யறிமின்.
|
63 |
|
|
|
|
அலகை
யின்குழாஞ் சூனியக் கபடிகண் மார்க்கர்
உலக ஞானிகண் மாயசா லகர்கதி யொழுக்கம்
விலகி யோர்களே பத்திவே டத்தைமேற் போர்ப்பர்
இலகு மெய்க்கிறிஸ் தவரிதைக் கனவினு மிகழ்வார்.
|
64 |
|
|
|
|
முன்னர்
மோகத்தை முனிந்திடாச் சிகேமெனு மூடன்
கன்னி காதலாற் கடும்பொரு ளாசையாற் கடைத்தோற்
சுன்ன மிட்டின ஜனத்தொடு வெட்டுண்டு தொலைந்த
துன்ன லீர்கொலாம் பத்திவே டப்பலத் துரிமை.
|
65 |
|
|
|
|
நெஞ்சஞ்
சாப்பரி சேயர்வை தவிகள்பா னிலவி
நஞ்ச மன்னதீப் பொருணயந் துலகத்துநடித்த
வஞ்ச மாயபொய்ப் பத்திமா காதிபன் கோபம்
விஞ்சி யாக்கிய சாபத்தை விளைவித்த தறிமின்.
|
66 |
|
|
|
|
அருளை
நச்சிமெய்ப் பத்திசெய் யடியரோ டமர்ந்தும்
பொருளை நச்சியே பொய்ப்பத்தி செய்தவப் புல்லன்
இருளை நச்சிநா ணிட்டிறந் தொழிந்தமை யென்றுந்
தெருளை நச்சியோர் சிந்தையுட் டிகழ்வது தெரிதிர்.
|
67 |
|
|
|
|
மித்தை
யாயசம் பத்தினைக் கீர்த்தியை வேட்டு
வித்த கப்புனி தாவியை விலைக்குத வென்னும்
மத்த னாயசீ மோன்திருத் தொண்டன்வாக் குதித்த
நித்த சாபத்தை யடைந்தமை நீணில நிகழ்த்தும்.
|
68 |
|
|
|
|
பத்தி
வேடத்துப் பதகரைப் பகைத்தரு வருத்து
நிதத தண்டனை விதிக்கின்ற நிருமல தெய்வம்
எத்த ருக்கநு கூலரென் றிசைத்தலெத் தனையாம்
புத்தி யீனமேத் தனைகொடும் பாதகம் பொல்லீர்.
|
69
|