பக்கம் எண் :

405

  ஆங்கவ னெறியிற் செல்லு மறவரை விளித்து நீவிர்
ஈங்கணைந் துமக்கு வேண்டு மிருநிதித் திரள்கைக் கொண்மின்
தாங்குபே ரின்ப லோகஞ் சார்தற்குத் தகவீ தன்றோ
நீங்கரு நிதிநீத் தேகு நிராசையோர் புலமைத் தன்றால்.
5
 
  வடுவிலா வையத் தியாண்டு மன்புரு டார்த்தமூன்றில்
நடுவண தெய்துங் காலை யிருதலை நலனு மெய்தும்
நடுவண தெய்தா னாயி னன்ணுவ னுலையிற் பெய்தாண்
டடுவது போற்றுன் பென்ற வறவுரை தெருளீர் கொல்லோ.
6
 
  என்றுள மருளக் கூவு மிருங்குரல் செவியின் முட்டி
நன்றறி வுறுநம் பிக்கை நலம்புரி குரவ வாண்டு
சென்றியா மடுத்து நோக்கித் திருமுதல் சீர்மைத் தாங்கொல்
ஒன்றுநின் மதியே தென்றா னுத்தம னுரைப்ப தானான்.
7
 
  எம்பிநீ மருளே லந்த விரும்பிலத் தியற்கை தேர்வல்
பம்பிய நாச மோசப் படுகரென் றறிதி யாண்டும்
அம்புவி மானி டங்க ளாசைப்பேய் பிடித்துத் தள்ள
வெம்பிவீழ்ந் திறக்குங் கோடி வேதனை யுழக்குங் கோடி.
8
 
  அறநெறி பிடித்துஞ் சில்லோ ரறிமடம் பூண்டாண் டேகி
உறவரு நாசத் துற்றா ருன்னத நோக்கிச் செல்லுந்
துறவுளேம் விலகி யாண்டோ ரடியிடத் துணிது மேனுந்
திறவிடைக் கவிழ்த்துங் காண்டி சிறிதுமோ ரைய மின்றால்.
9
 
  அங்குநின் றுரக்கக் கூவு மழிம்பனிவ் வுலகத் தாய
பொங்கிருந் துரோகம் பூத்த பொருளாசைக்குலத்தி லுள்ளோன்
இங்கிவன் றாதை யூதா செனுங்குருத் துரோகி பாட்டன்
எங்குங்கே யாசென் றோது மெஜமாநத் துரோகி யாமால்.
10
 
  வேதியர் குலத்துக் கெல்லாம் விக்கினம் விளைக்கு மிந்தக்
காதக னமையு மிந்தக் கிடங்கரிற் கவிழ்க்க வுன்னி
ஆதரித் தழைக்கின் றானா லணுவெல்லை கடத்து மாயின்
வேதனைப் படுகர் வீழ்வே மெய்மையீ தைய வோர்தி.
11
 
  ஆசைப்பேய் பிடித்த நால்வ ரடுக்கிலிவ் வழிம்பன் கூற்றால்
நீசப்பாழ் நிதிக்கி டங்கை நேர்ந்துயிர் மடிவா ரென்றற்
கீசத்து மைய மின்றா லென்றுவற் புறுத்தி நன்கு
பேசிப்பின் விளித்து
நின்ற பிசாசனுக் கீது சொன்னான்.
12