|
ஏதமில்
பரலோ கத்து யாத்திரி கரையே மாற்றிப்
பாதகம் புரியு மிந்தப் படுகுண தோஷி தேமா
சீதெலா முணரான் கொல்லோ வெச்சரிப் படையா தென்னே
மாதுயர்க் கடற்குள் வீழன் மதிகொலோ கண்ணை மூடி.
|
21 |
|
|
|
|
என்றிவை
தெருண்டு தான்ற னேழைமை யுணர்ந்து மேனோர்
பொன்றிடு மடமை யுள்ளிப் பொருமியும் புகன்ற மாற்றம்
நன்றென விதயத் துள்ளி நம்பிக்கை வதன நோக்கி
ஒன்றுநீ கேட்டி யென்னா மறைவலா னுரைக்க லுற்றான்.
|
22 |
|
|
|
|
ஆதிநந்
தனவ னம்போ லமைவருஞ் சிறப்பில் வைத்த
கோதிலா வளங்கொள் சோதோங் குடிகணன் றெள்ளிச் செய்த
பாதக வினைக்கு நோந்த படுகனன் மழையை யுள்ளி
மேதினி யுயுமா றுய்த்த வியனடை யாள மீதால்.
|
23 |
|
|
|
|
தெய்வத்தை
மதியா ராகித் தீவினை துணிந்து செய்யும்
மைவைத்த மனத்தா ரெல்லா மற்றுமித் தகைய வாய
மெய்வைத்த குறிகள் கண்டு விரைந்துளந் திரும்பா ராகிற்
கைவைத்து நீதித் தண்டங் கனற்சிறைக் கடற்கு ளுய்க்கும்.
|
24 |
|
|
|
|
உத்தம
தேவ சித்த முவப்பொடு தெரிந்து கொள்ளா
அத்திறத் தவரின் னாரென் றறிகில மாத லாலே
எத்திறத் தவர்க்கு முண்மை யிசைத்தனங் கடனா மென்றும்
புத்துயி ரளித்தீ டேற்றல் புண்ணியப் பகுதி யாமால்.
|
25 |
|
|
|
|
கதிவழி
விலகிச் சென்றக் கடுங்குழி கவிழா தெம்மை
மதிநல னளித்துக் காத்த மாதயா பரனே முற்றும்
விதிவழி திகழ்த்திக் காப்பார் வித்தக விரைதி யென்னாப்
பதிதிரு நாமம் போற்றித் துதியொடு பரவிச் செல்வார்.
|
26 |
|
|
|
|
சுரங்கப்
படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஞாலமீக
கதிவழி நாடி யேகுநற்
சீலவே தியரிரு வோருஞ் சில்பகல்
சாலவை திலநலந் தழைத்த தண்ணிய
வாலிய நறுநிழல் வழங்கச் செல்லுவார்.
|
1 |