|
நதியிரு
மருங்குறு நறுந்தண் பூம்பொழில்
மதியுயர் சினைத்தலை மறிய வோங்குதல்
புதியநீர் பருகுபுண் ணியப லத்தினாற்
கதிபுகுந் திடவெழுங் காட்சித் தாமரோ.
|
18 |
|
|
|
|
பூவலர்
கற்பகப் பொலன்பொ தும்பருந்
தாவரு நல்லறச் சாலிப் பண்ணையுங்
காவலன் விரும்புபூங் காவ னங்களும்
ஜீவநீர் பாய்தரிற் செழிப்புற் றோங்குமே. |
19 |
|
|
|
|
ஞாலர
க்ஷகன்றிரு வுருவை நாடிமெய்ச்
சீலர்கண் ணொடுமனந் தெருண்டு பற்றல்போல்
வாலிய தருக்களை வல்லி சாதகங்
கோலிநாண் மலரொடு கொளுவித் தோன்றுமால்.
|
20 |
|
|
|
|
மேனனி
நோக்கிய வியன்ற ருப்பயன்
மாநில நோக்கிய மரபின் காட்சிதான்
வானுற நோக்கிய வடியர் மாணடை
பூநல நோக்கிய புதுமை போலுமால்.
|
21 |
|
|
|
|
துற்றிள
நீாக்குலை சுமந்து முற்றுமட்
டுற்றநெட் டிலையதெங் கொருங்கு தாங்குதல்
கொற்றவன் கடைவரை குறிக்கொண் டன்பரைப்
பற்றுகை நெகிழ்ந்திடாப் பான்மை காட்டுமால்.
|
22 |
|
|
|
|
நறியமுக்
கனிநறை நறுந்தண் பூநறை
சிறையளி முரன்றுமொய்த் தருந்தித் தேக்குறல்
மறையவர் குழீஇத்துதி பகர்ந்திம் மாநுவேல்
நிறையரு ணுகர்ந்திடு நீர்மை காட்டுமால்.
|
23 |
|
|
|
|
தெள்ளுநீர்
வாவியிற் றிகழ்ந்த தெண்ணறும்
வள்ளவாய்க் கமலங்கண் மலர்ந்து தோன்றுதல்
விள்ளருந் திருவரு ணிறைந்த வித்தக
உள்ளமீக் கிளர்ந்தொளிர் வதன மொக்குமால்.
|
24 |
|
|
|
|
முதிர்சுவை
முக்கனி முதல தீங்கனி
நதிவளம் படுத்தபன் னறுஞ்செ ழும்பயன்
கதிவழிப் போக்கரை யூட்டிக் காதலிற்
பொதுமையா நுகர்வரப் புனித தீரத்தர்.
|
25 |