|
தருமமார்
தருசெழுஞ் சாலி வண்பயன்
அருமறைச் சுரபிநின் றளிக்குந் தூயபால்
கருமவான் சுவைக்கரும் பீன்ற கட்டியோ
டிருமையு நுகர்ந்துதேக் கெறிவ ரெங்குமே.
|
26 |
|
|
|
|
பொன்னுல
கத்துவாழ் புனிதர் சாயையே
இந்நதி தீரத்தி னிரும ருங்கினும்
மனனுமா னிடங்களின் படிவம் வாய்ந்தெனத்
துன்னுவ ராற்றிரி கரண சுத்தராய்.
|
27 |
|
|
|
|
கேவல
நகர்புகக் கெழுமு பாதையிச்
சீவகங் கையையடுத் தினிய தேன்சொரி
காவகத் திடைசெலக் கருதி யாரியர்
பூவரு துறக்கமே போலு மீதெனா.
|
28 |
|
|
|
|
புண்ணிய
நதியின்மான் மியமும் பொற்புறு
தண்ணிய நறும்பொழிற் சமைவுந் தம்மகத்
தெண்ணிமன் வியந்துரை யாடி யேம்பலோ
டண்ணலை யிறைஞ்சிமன் றாடிப் போயினார்.
|
29 |
|
|
|
|
ஜீவநீர்க்
கங்கையாந் திவ்ய தீர்த்தத்திற்
பாவநோ யொருங்கறப் படிவர் பத்தியோ
டாவியா ரோக்கிய மடைவர் சூடுவர்
பூவலர் நறுந்தொடை புசிப்பர் தீங்கனி.
|
30 |
|
|
|
|
தீர்த்தனோ
ரன்பினைச் சிந்தை செய்துசெய்
தார்த்தியிற் போற்றுவ ரவச மாகுவர்
சீர்த்தியைப் புனைந்துரை செய்வர் தெய்விக
கீர்த்தனை யகக்களி கிளைப்பப் பாடுவார்.
|
31 |
|
|
|
|
பிறிதொரு
புலன்விழை யாத பெற்றியர்
பொறிநுகர் வனவெலாம் புனித மாதலின்
அறிதுயி லமர்ந்திளைப் பாறி யாவியிற்
செறிபர மானந்தந் தேக்கு கிற்பரால். |
32 |
|
|
|
|
இத்திற
நம்பிக்கை யிலகு வைதிக
வித்தகர் பல்பகல் விபத்து விக்கினஞ்
சித்தசஞ் சலமொரு சிறிது மின்றியே
முத்திமார்க் கத்திலே முன்னிட் டேகுநாள்.
|
33 |