|
நனிக
னற்றுதா பங்கெட நறும்புன லாடி
இனிய போனக பானமுண் டிருந்திளைப் பாறித்
துனித விர்ந்தவ ணேகுழி முன்னுறத் துருவித்
தனிந டக்கும்வீ ணம்பிக்கை தனைக்கண்டு சார்ந்தார்.
|
58 |
|
|
|
|
உற்ற
நம்பிக்கை யுரையகத் தூன்றிநின் றுறுத்த
நற்ற வன்விரைந் திவ்வழி யெவ்வயி னாடுஞ்
சொற்றி யென்னவீ ணம்பிக்கை மறற்றிது சுவர்க்கக்
கொற்ற வன்றிரு நகரத்துக் கூட்டுவ தென்றான்.
|
59 |
|
|
|
|
கேட்டி
யிங்கிவன் கிளந்தமை நம்பியாங் கேடில்
வீட்டு நூல்வழி யருகுளே மென்பதை விளங்கக்
காட்டு மாலினிக் கவல்கிலை யென்றனன் கடுகி
மீட்டும் வெஞ்சிறைப் படுவதைத் தெரிகிலா விருத்தன்.
|
60 |
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
மதிவ
லானுநம் பிக்கையு மன்னர்கோன்
விதிவி லக்கைவி தந்துரை யாடியே
கதிவ ழிக்கரு காய்ச்சில காவதம்
புதிய பாதையிற் போயின ரென்பவே.
|
61 |
|
|
|
|
சுருதி
மார்க்கந்தி கழ்த்திடு தூச்சுடர்
நிருத வைப்பின்ம றைந்திடு நீர்மைபோற்
பிருதி விக்கிருள் போக்கிய பெற்றிசால்
பரிதி யும்மறைந் தான்குட பால்வரை. |
62
|
|
|
|
|
துங்கப்
பாதைய ருகுறத் தோன்றிய
பங்கப் பாதைப கலொடு பாறிடச்
சங்கைக் கோட்டத்த குவன்ச திவழி
கங்குற் போதொடு வந்துக லந்தவே.
|
63 |
|
|
|
|
சேண
கர்ப்பர தேசிக ளைப்பிடித்
தூணு வக்குநி ருதனு றுத்திய
கோணி லைப்படு கொப்பத்துக் குப்புறீஇ
வீணம் பிக்கைமுன் சென்றுவி ழுந்தனன்.
|
64 |
|
|
|
|
குத்தி
ரப்படு கொப்பத்துக் குப்புறீஇ
மொத்துண் டேங்கிக்கை கான்முறி பட்டுயிர்
கைத்த ழுங்கிக்க தறிடு கூக்குரல்
வித்த கர்க்குவெ ருட்சிவி ளைத்ததால். |
65 |