பக்கம் எண் :

423

  தண்டித்துநின் றுகெடு வீரினிச் சாரு கில்லீர்
பண்டுற்றமார்க் கம்படர் வேமெனும் பாழ்நி னைப்பைத்
துண்டித்துவிட் டுத்துணிந் தாருயிர் சோரு மாறு
தெண்டிக்கொளி னன்றியிப் பாடணுத் தீர்வ தின்றால்.
122
   
  நஞ்சுண்டுசா மின்மன மின்றெனி னாணி கொண்டு
துஞ்சுண்டுபோ மின்னல தாவிதொ லைக்கு மேதி
எஞ்சுண்டதல் லையுல கத்தினி யீறு காறும் அஞ்சுண்டடி
யுண்டுயி ரோம்பலி னாவ தென்னே.
123
   
  வெயிலுற்றபோ துபனி பற்றற வீயு மாப்போல்
அயிருற்றனை யகடுந் துன்பம டர்ந்த காலை
செயிருற்றபத் திநடை பற்றறத் தீர்ந்து பின்னும்
உயிருற்றனிர் வெட்கமில் லீர்கதி யுள்ளு தற்கே.
124
   
  என்றின்னன பன்னினன் வாய்செறித் தேகி னானவ்
வன்றிண்புய வல்லரக் கன்மனை மாடு நோக்கி
அன்றின்னல டைந்துயிர் கைத்தழு தாக்கை நொந்து
நின்றங்கினை யும்மிரு வேதியர் நீர்மை தேர்வாம்.
125
   
                  வேறு
   
  பற்றுவி டாத கண்டக னென்னும் படுபாவி
சற்றுமி ரக்க மின்றிவ தைக்கச் சமையோடும்
முற்றுமு ழந்தா ராக்கைத ளர்ந்தார் முனிகில்லார்
சொற்றில ரேதுந் தம்பிழை யுள்ளித் துரிசில்லார்.
126
   
  துஞ்சிருள் பூமி நஞ்சுகு முண்ணி துருநாற்றம்
வெஞ்சிறை யின்ன சஞ்சல மாய விடமேறி
எஞ்சுவ தென்னீ ரஞ்சலி ரென்பா ரிலராகப்
பஞ்சர முற்ற கிள்ளையின் மாழ்கிப் பரிவுற்றார்.
127
   
  வேதனை யாற்றான் வேதிய னுள்ள மிகநொந்து
காதக னென்னோ ஜீவனை வாங்கக் கருதாது
நோதக விட்டுப் போயினன் யானிந் நுகர்துன்பஞ்
சாதலி னன்றித் தீருவ தேயோ தகவுள்ளில்.
128
   
  என்னே யென்னே மன்னருள் வேண்டி யெரிபாலை
பின்னே யாக முன்னடை கூடிப் பிழையாமே
கொன்னே சோரக் குக்கலின் வன்கோ லடியுண்டிங்
கின்னே சாவாக் குற்றுயி ரொடுநைந் திறுமோசம்.
129