|
|
|
|
வேறு |
|
|
|
|
|
இன்னவா
றகத்துத் தேம்பி யெழின்மறை வாணன் றேவ
சந்நிதி யடைந்து போற்றிச் சனியிரா விடிமட் டாக
மன்னிளங் குமரன் செய்ய மலரடி வலிந்து பற்றி
அந்நிலை விடாது நின்றா னருட்டுணை யணுகுங் காறும்.
|
163 |
|
|
|
|
உலகிரு
ளகற்றி வெய்யோ னுதயத்துத் திகழா முன்னம்
அலகிலாக் கருணைப் பௌவத் தருட்கதி ரலர்ந்து தோன்றி
இலகொளி பரப்பிச் சிந்தை யிகலற நூறிப் போர்ப்பப்
பலகலை ஞானி யுள்ளம் பத்தியாற் சொலித்த தன்றே.
|
164 |
|
|
|
|
அகத்தொளி
மலித லாலே யாரிய னயர்தி நீங்கி
மகத்துவ தெய்வ வேந்தை மனமொழி யார வாழ்த்தி
மிகத்துதி பகர்ந்து போற்றி மெய்யெலாம் புளகம் போர்ப்ப
முகத்தெழில் குலவி நம்பி கேளென மொழவ தானான்.
|
165 |
|
|
|
|
பொங்குபே
ரின்ப நாட்டுப் புரவல னருளே யீண்டு
மங்கொளி விளக்கைத் தூண்டி வளர்த்திய வண்ண நின்வாய்த்
துங்கவாக் குருவாய்த் தோன்றித் துயல்வரு மனச்சந் தேக
வெங்கொடு மயலி னின்று மீட்டெனைப் புரந்த தின்னை.
|
166 |
|
|
|
|
உஞ்சன
முஞ்ச மென்னின் னுயிரனா யொல்லை யேயிவ்
வெஞ்சிறைக் கதவின் வன்றாள் திறந்தியாம் வெளிப்பட்
டுய்வான்
சஞ்சல மிகுசந் தேக துருக்கத்தைத் தணந்து போக
எஞ்சலில் கருவி யாய திறவுகோ லுளதொன் றென்பால்.
|
167 |