பக்கம் எண் :

431

ஆனந்த சைலப் படலம்
 
 
இனையன நிகழ்ந்த பின்ன ரெமக்கினி நிருதன் செய்யும்
வினையெது மின்றா மிந்த வித்தக ராஜ வீதி
தனையவ னணுகா னென்னாத் தம்மிலே யுவந்து பேசி
முனைவனைத் துதித்தார் பல்கான் முறையறி ஜீவன் முத்தர்.
1
 
பானமு மின்றி நானாட் பசித்தலில் ஞான ஜீவ
போனகந் திருத்தி யுண்டு புத்துயி ரடைந்து தேவ
ஆனக முழக்கங் கேட்கு மானந்த சைல நாடி
வானெறி மருவிப் போனார் வானெறி மருவி வந்தார்.
2
 
காதவ மிரண்டு மூன்று கடந்துசென் றிடுது மாயில்
ஜீவவா னந்த மல்குஞ் செழுங்கிரி சேர்து மென்னா
ஆவலித் தறவோர் சிந்தித் தடுத்தடுத் தேக வேகத்
தாவரு வசந்த மென்கால் தவழ்ந்ததச் சாரனின்றும்.
3
 
குளிரிளந் தென்றன் மேனி குளித்தலுந் தளர்வு நீங்கி
இளிவரு ஜென்ம தோட மிரிந்துபே ரின்ப மல்க
நளினமொத் தலர்ந்து செவவி நகைமுகந் திகழத் தூயர்
களிமகிழ சிறப்பச் சென்று கனகமால் வரைகண் ணுற்றார்.
4
 
               வேறு. (சந்த விருத்தம்.)
 
புதுவிரை மதுமலர் பொதுளிய முதுசினை பொழலுழை தழுவுல
                                         புயல்
வதுவையினதிபதி பொருவரு கிருபையின் மலைதலை பொழிவள
                                         மழை
அதிரிடி முழவெழ வரிமுரல் சுருதியி னகவுவ மகளிரின் மயில்
மதுரிய நறைகுட மடிபடி யுகுபய னளவிய விளைவன வயல்.
5
 
மாலுறு கொடுமுடி மணியணி யெனவிழு மருவிகள் பொருவன
                                           தடம்
வாலிய திருவருள் பொருபெரு வளநனி மருவிய பெருவர நதி
கோலிய ஜெபதப விரதரும் வரதரும் வரன்முறைகுடைவன துறை
பாலடை மலைமிலை பரிசென விரசுவ பருவர லொருவுறை பனி.
6
 
மழகளி றெழி லுளையரிவரி யுழுவைக ளுழைவிழை
                                  வொடுதிரிவனம்
தழலென வொழுகொளி தழுவிய கொழுமுகை தழையொடு கெழு
                                        முவ தரு
கழுதுக ளுழுதுழு திதழவிழ் செழுமலர் களகள சொரிவன மது
பழுதறு கிரியையி னெழுதுணர் விரியலா பலதிசை கமழுவ கடி.
7