சந்த
னந்தந்தி கழுந்த டங்களில்
சந்த னந்தந்தி கழ்தடஞ் சாரலில்
வந்த னந்தந்தி மாலையுங் காலையும்
வந்த னந்தந்தி றைவனை வாழ்த்துவார்.
|
24 |
|
|
மலையெலாம்
புனிதஞ் செல்லு மருங்கெலா மகிழ்ச்சி தெண்ணீர்
நிலையெலாங் கருணை நீத்தம் நெறியெலா நீதி மார்க்கங்
கலையெலாஞ் சுருதி பேச்சுக் கனிவெலாந் தேவ பாஷை
தலையெலா மாசீர் வாதஞ் சார்பெலாம் பசும்பொற் கேணி.
|
25 |
|
|
மாதவப்
பள்ளி தோறும் வரன்முறைத் தொழும்ப ரீட்டம்
பாதவப் புரைக டோறும் விழுக்கலை பனவ ரீட்டம்
மேதகு கழகந் தோறும் விழுக்கலை மழவ ரீட்டம்
போதலர் பொய்கை தோறும் புகரறு மகளி ரீட்டம்.
|
26 |
|
|
கள்ளவிழ்
முல்லை யீன்ற கடிமுகை யனைய மூரற்
பிள்ளைகள் விமல ஞானம் பிறங்குதீங் குரலி னோடு
வள்ளலெம் மிளங்கோ மான்செம் மலரடி வழுத்தி யேத்தும்
தெள்ளிய மதுர கீதஞ் செவிமடுத் திடுமெப் பாலும்.
|
27 |
|
|
விருந்தெதிர்
கொண்டு நாடி விழுத்தகு மரபி னோம்பிப்
பொருந்துமெய் யன்பிற் றூய போனக மளிப்பர் பல்லோர்
வருந்துவோர்க் குடையைத் தாங்கும் வண்கையி னுதவி நேர்ந்து
திருந்துநன் மதிகள் சொல்லித் தெருட்டுவார் தம்மிற் பல்லோர்.
|
28 |
|
|
பொருளெலாம்
பொதுமை மேய புகழெலா மிறைமை நாடும்
அருளெலாஞ் செல்வ முள்ளத் தவாவெலா மறுமை யாக்கந்
தெருளெலா மான்ம போதஞ் செயலெலாந் திருத்தொண் டென்ப
மருளெலா மொழித்து நோற்கு மலைப்பிர தேசத் தோர்க்கே.
|
29 |
|
|
பெய்வது
கருணை மாரி பெருகுவ தன்பி னீத்தஞ்
செய்வது தருமப் பைங்கூழ் திருந்துவ துயர்பே ரினபம்
உய்வது ஜீவ கோடி யோங்குவ தமலன் சீர்த்தி
தைவிக பரமா னந்த சைலப்பிர தேசத் தென்றும்.
|
30 |
|
|
மானந்தண்
ணுமையா வண்டு பாண்செய மயில்க ளாடக்
கானந்தன் னவையாச் செய்ய கமலக்கண் களித்து நோக்கிப்
பூநந்து நறுந்தண் கொன்றைப் பொன்னணிப் பரிசு நல்கி
ஆனந்த சைல வேந்த னரசுவீற் றிருப்பன் மாதோ.
|
31
|