நெறியறிந்
தவாவை நீக்கி நிருமல வேந்தைக் கிட்டி
முறையறிந் தருளை வேண்டி முன்னிட்டு முடுகல் வேண்டும்
இறைதிருக் கரமே நும்மை யிறுவரை காக்கு மென்றாங்
கறியமற்றொன் றுண்டின்னும் வம்மினென்றழைத்துப் போனர்.
|
80 |
|
|
விண்ணுற
மிளிர்ந்து தோன்றும் வித்தகத் தெளிவென் றோதும்
வண்ணவான் சிகரி யண்மி மறைவலீ ராடி யீது
புண்ணிய நகரைக் காட்டும் புதுமையைக் காண்மி னென்னாக்
கண்ணடி வாங்கி யுற்று நோக்கினர் கருத்துள் ளூன்றி.
|
81
|
|
|
விரிதரு
பரமா காய வெளிதிகழ் பரம சீயோன்
கிரிமிசை யனந்த கோடி சூரியர் கிளர்ந்தா லென்னப்
பரவிய மகிமை யோங்கிப் பகிரண்டப் பரப்பை யெல்லாந்
தெரிதர விளக்கிக் காட்டுந் திவ்வியப் பிழம்பு கண்டார்.
|
82 |
|
|
மேனிமிர்ந்
தெழுந்த ஜோதி கற்பக விருக்கம் போலும்
வானஜோ திகளு மண்ட கோடியு மரத்திற் றொக்க
கானனை விரிபூங் கொத்து காய்கனி முதல போலும்
வானுற நிவந்து நிற்கு மரபினைத் தெரியக் கண்டார்.
|
83 |
|
|
மொய்த்தெழு
மகண்டா கார முழுச்சுடர்ப் பிழம்பின் முந்து
பத்தியிற் றமக்கு நேரே பவித்திர பரமா காய
வித்தக வெளியைக் கண்டார் விமலசந் நிதியி லுய்க்கும்
நித்திய ஜீவ வாயி லிதுவெனு நினைவுட் கொண்டார்.
|
84 |
|
|
வானக்கண்
கொள்ளா தோங்கு வளரொளித் திரளைத் தீர்ந்த
ஞானக்கண் ணடியி னாடிக் காணவு நடுங்கி யஞ்சி
ஊனக்கண் வழுக்கிக் கூசி யொல்லைத்தம் மிமையை மூடித்
தானக்கண் விழுந்திறைஞ்சித்திசைநோக்கித் தாழ்ந்துசொன்னார்.
|
85 |
|
|
வாக்கினுக்
கதீத மெங்கள் மனத்துக்கு மதீதம் ஞான
நோக்கினுக் கதீதம் நும்பால் நுவலுதற் கதீத மாக
மேக்குயர் முகடு முட்ட விளங்கிய பிரபை கண்டேம்
பாக்கிய நகரத் துள்ள பகுப்பொன்றுங் காணு கில்லேம்.
|
86 |
|
|
அண்ணலார்
புனித மாய வக்கினிப் பிழம்பீ தென்கோ
எண்ணரு மகிமை ஜோதி யீதென்கோ விளங்கோ வீட்டும்
புண்ணியப் பொலிவே யென்கோ பொங்கிய பரமா னந்தங்
கண்ணிய நிலைய மென்கோ யாதெனக் கழறு கிற்பேம்.
|
87 |