|
ஒரும
கப்பலி யூட்டிய வுரிமையு மரசின்
திருவை நீத்தினந் தழுவிய தீரமுஞ் சினத்தீப்
பொரும ழற்படு சூளையை முடங்குளைப் புழையை
வெருவு றாதெதிர் தருக்கிய வொள்ளிய விறலும்.
|
27 |
|
|
|
|
உலகை
யிள்ளுவர்த் தோட்டிய வுத்தம நிலையும்
அலகை யைப்புறங் கண்டுள ராற்றலின் மாண்பும்
கலக மிட்டுயிர் கவிழ்த்தபோழ் தத்துமுட் கலங்கா
திலகு மெய்வயி ராக்கியத் தியற்கையு மினவும்.
|
28 |
|
|
|
|
தேரி
னெம்பிமற் றிவ்வெலாந் தீர்க்கவிஸ் வாசத்
தாருஞ் செய்கையென் றறியினி யற்பவிஸ் வாசச்
சீரு மீண்டெடுத் தியம்புவல் சிறியவோ ரிடுக்கண்
சாரு மாயினுந் தளர்ந்திடுங் குலைந்துளஞ் சாம்பி.
|
29 |
|
|
|
|
பண்டு
மாநிலக் கிழமையைப் பத்தியிற் படைத்தும்
மண்டு சோதனைக் கிடைந்துபின் வழுக்கிவீழ் மரபும்
ஒண்டொ டிக்கெதி ரூன்றிடா துண்மையைப் புரட்டி
அண்டர் நாதனை மறுத்தபே ரவலத்தி னமைவும்.
|
30 |
|
|
|
|
நீரி
மான்றின மெழுமுறை விழுந்தெழு நீர்மை
பேதி யாதருண் மொழிமொழி பெற்றியும் பிறவும்
சாது மார்க்கஞ்செ லற்பவிஸ் வாசத்தின் சமைவாம்
ஈது நிற்கவே சாநிலை தெருளென விசைப்பான்.
|
31 |
|
|
|
|
வேறு.
|
|
|
|
|
|
மாசி
லாவிசு வாசத்தின் மாண்பெலாம்
பேசக் கேட்டனை சொற்றவிப் பெற்றியோர்
ஈசத் தேனுமுண் டென்னவெ சாவிசு
வாசச் செய்கைவ குத்ததுண் டோமறை.
|
32 |
|
|
|
|
சேட்ட
பாகசு தந்தரச் செவ்விவிற்
றூட்டி னான்பசிக் கொல்கியின் னோர்துயர்
வாட்டுங் காலைத்தம் மாத்தும வாழ்வைவிற்
றீட்டு வார்புலை யின்பத்தைக் கூளிபால்.
|
33
|
|
|
|
|
ஈச
னீந்தவு ரிமையை யெட்டுணை
ஆசை யின்றிவ ரைந்தன னாதலில்
ஏச னுக்கிறை வன்வயி றேயலால்
பேசு தெய்வம்பி றிதுள தோசொலாய்.
|
34 |