பக்கம் எண் :

450

  நீச நெஞ்சர்நிட் டூரிக ணேர்விசு
வாச காதகா வான்கதி மார்க்கரை
மோசம் போக்கிமு ழுக்குரு டாக்கிடும்
நாச காலர்ந ராந்தக ராமிவர்.

51
   
  வேண்டு மாயின்வி ளிப்பர்ப சாசினை
ஆண்ட டுத்தவ னுஞ்சம ராடுவன்
ஈண்டு வேறலெ வர்க்கும ரிதுகாண்
ஆண்ட கையரு ளப்பருக் கேயலால்.
52
   
  இனைய வஞ்சப்ப கைவர்வந் தீண்டிய
முனைமு கத்துமு றிந்துடைந் தோர்களெத்
தனைய ரென்றுரை யாடுவல் தக்கதன்
றனையர் தம்மைய வமதித் தெள்ளலே.
53
   
  நேருங் கள்ளநி சாசர ரைத்தெறுந்
தீர ரென்றுசெம் மாந்துசெ ருக்கிவீண்
வீரி யம்புகல் வீம்பரின் னோரன
போரி லென்றும்பு றக்கொடை யீவர்காண்.
54
   
  வள்ள லூர்புகு மார்க்கத்தி டைக்கிடை
கள்ளர் தொக்கணி கைப்பொரு ளாதய
கொள்ளை யாடுங்கு றியுடைத் தாதலிற்
றெள்ளி யோர்செய்தி றன்சொலக் கேட்டியால்.
55
   
  வெற்றி கொள்விசு வாசப்ப ரிசைகைப்
பற்றி யேனைப்ப டைக்கல முந்தரித்
தற்ற நோக்கிய ருட்டுணை யின்பலம்
முற்று நாடிமுற் செல்வரிம் மொய்ம்பொடே.
56
   
  வாத னைப்படு மாரணச் சூழலைக்
காத கப்பகை யைப்படு கள்வரைச்
சோத னைத்திர ளைக்கொடுந் துர்ஜந
சாத கக்குழு வைச்சம பூமியை.
57
   
  பண்டி ராஜப ரிஜந ராயமெய்த்
தொண்டர் வென்றுது ரந்துக டைப்பிடித்
தண்டர் கோனக ரத்தைய டைந்தனர்
விண்ட லத்துவி புதர்கொண் டாடவே.
58