பக்கம் எண் :

455

  முற்று பேரிடர் மூடிய முறையறிந் தீசன்
உற்ற டுத்துவந் துயிரளித் துதவிய வுரித்துங்
குற்ற மின்மதி புகன்றுளந் தெருட்டிய குணமுஞ்
செற்ற மோடடித் தருள்புரி திருவுளக் குறிப்பும்.

30
   
  அகத்து மல்கிய ஜீவவித் தனைத்துநம் மீசன்
முகத்து மல்கிய வருட்டுளி தோய்தலின் முளைத்து
மிகத்தெ ருண்டமெய் யுணர்ச்சியின் விதந்துரை யாடி
மகத்து வம்புனைந் தேத்தினர் வழிக்கொடு போனார்.
31
   
                     கார்வண்ணப் படலம் முற்றிற்று.
   
 
சோக பூமிப் படலம்
 
   
  மாக நாயகன் றிருவருட் டுணைமையின் வலத்தான்
மோக விச்சக தேசத்தை முற்றும்விட் டொருவித்
தேக தத்துவத் தளர்வினை யசதியைச் செறிக்குஞ்
சோக பூமிசென் றடைந்தனர் சுருதிநூல் வலவர்.
1
   
  மன்னு யிர்க்கெலா முரிமையே மறுமையாத் திரிகம்
என்னி னுஞ்சில ரன்றிமற் றெவருமிங் கெய்தார்
பன்னு மாலுறு சோகபூ மியினலம் பருகா
முன்ன ரேமுடித் திடுவரங் கிடைக்கிடை முறிந்து.
2
   
  இருந்தி ருந்திடைந் தேங்கலு மெழுந்துதள் ளாடி
வருந்த லும்பொறி மயங்கலுந் தியங்கலு மறுகிப்
பெருந்த கைக்குணம் பிறழ்ந்துபே துறுதலும் பேணி
அருந்த லுந்துயில் பொருந்தலு மந்நிலத் தியற்கை.
3
   
  முதுமை யாகிய வாடைவந் துடலிடை முயங்க
மதிம யங்கிவை திகநடை தளர்ந்துகண் மருண்டு
விதிநி டேதத்து விழிப்புறா விதந்தனை மறந்து
புதுமை யாத்துயில் பொருந்தலே யந்நிலப் புதுமை.
4
   
  இற்ற தாகிய படப்பையை வேதிய ரெய்தி
மற்றி தானந்த சைலத்து மாதவர் வகுத்துச்
சொற்ற சோகமா நிலமெனத் தம்முடற் சோக
முற்ற வாறுகண் டுணர்ந்தன ராண்டுற்ற வொல்லை.
5