|
உலகெலாஞ்
சமழ்த்த பாவ மொருங்கொரு தனியே தாங்கி
விலகருஞ் சிலுவை மீது விண்ணின்று விழுத்த நீதி
அலகறு தண்ட மேற்றிங் குயிப்பாலி யமலற் காக்கி
நிலவுல கருக்கென் றுய்த்த நீதியே ஜீவ நீதி.
|
46 |
|
|
|
|
பொன்றிய
புனித மேனி பூசமா தியினும் புக்கு
நின்றுமன் பதைகட் கெல்லா நித்திய ஜீவன் மல்க
வென்றியோ டுயிர்த்தெ ழுந்த விந்தையை விசுவ சித்துள்
ளொன்றுமெய் யடிய ரன்றோ வுன்னத பதம்பெற் றுய்வார்.
|
47 |
|
|
|
|
இத்திரம்
பரம ராஜ்யத் திளவர சாய வெம்மான்
உய்த்தர க்ஷணிய மார்க்கத் துண்மையை விசுவ சிக்கிற்
சித்தசஞ் சலம்போம் நீதி திகழ்ந்தொளி கிளைக்கு நின்னை
மொய்த்தபா பாந்த கார முற்றிலும் விடியு மன்றே.
|
48 |
|
|
|
|
ஆண்டகை
நீதி யென்னை யடையுமா றெவன்கொ லென்னாத்
தேண்டுதி மெய்யன் போடு திகழ்விசு வாசமுன் னிற்
காண்டகக் கவினிற் றென்னில் கருணையாற் றொழுக்கீ
தொன்றோ
வேண்டுநன் னிதியம் யாவும் வியனகப் புலந்தந் துய்க்கும்.
|
49 |
|
|
|
|
நன்மைசால
தேவ மைந்தன் நடுநின்று நரருக் கேயாய்
வன்மைசான் மநுட தன்ம வரம்பறா தொழுகி நீதிப்
பொன்மலை குவித்துத் தம்மைப் புகல்புகுந் தவர்க்கு நல்குந்
தன்மையை நம்பிச் சேறி சான்றுமெய் யடியார் சங்கம்.
|
50 |
|
|
|
|
கடைப்படு
வன்க ணீசப் புலையனேன் கணிப்பில் பாவ
முடைத்தொழு நோயி னாக்கை முயங்கியேன் றுணிந்து முன்சென்
றடைக்கல மெனலாங் கொல்லோ வருவருக் காதென் கண்ணிர்
துடைப்பரோ புனிதரென்னா வையுறீஇத் துளங்கல் கேண்மோ.
|
51 |
|
|
|
|
பொருந்துவெங்
கொடிய பாவப் பொறைசுமந் திளைத்துச் சிந்தை
வருந்துவீர் வம்மின் வம்மன் வந்திளைப் பாறி யென்னோ
டிருந்துண வருந்து மின்னென் றெம்பிரான் விளிக்கு மின்சொற்
றெரிந்திலை போலு மெம்பி செவிகொடு செவிகொ டின்னே.
|
52 |
|
|
|
|
உரைசெயற்
கரிதெம் மைய னுபதேச மொழுக்கஞ் சீலம்
விரைசெறி கிரியை துன்ப மிருத்துவே தனையிவ் வெல்லாம்
புரையற விளக்கு மிந்தப் புத்தகங் கொண்ணீ யென்றீந்
துரைநிலை பிசகா திந்த வுலகொழிந் திறினு மென்றான்.
|
53
|