பக்கம் எண் :

465

இத்திற நிகழ்ந்த பின்றையெம்பிரா னெனக்குள் ளுய்த்த
சத்திய வாக்கின் வண்ணந் தணப்பிலா விசுவா சத்தான்
முத்திநீ தியுமம் மான்மெய் முழுகுசோ ரியின்பி ராயச்
சித்தமும் லபிக்கு மென்னாத் தெள்ளிதி னுணர்ந்தேன் மேலும்.

78
 
நன்றியோ டுள்ளி நாளு நயந்தடித் தொழும்பு பற்றி
ஒன்றிய சிந்தை யாற்கே யுரியவாங் கிறிஸ்தி யேசு
நின்றுகீழ்ப் படிந்து பார்க்கு நிருமித்த தண்ட மேற்றுப்
பொன்றியு மீட்டி வைத்த புண்ணியப் பொலிவென் றோர்ந்தேன்.
79
 
               வேறு.
 
இம்மெய் வாக்கொளி யென்னித யத்துற
மைம லிந்தம னத்துயர் மாய்ந்தது
மெய்ம கிழ்ச்சிநி றைந்துவி ழிவழி
கைமி குந்துகண் ணிரெனக் கான்றதால்.
80
 
நந்த மேசுக்கி றிஸ்துவை நம்பிய
அந்த ணாளரை யாங்கவர் சீலத்தைச்
சிந்தை யாரச்சி றக்குநண் பாற்றிட
இந்தி யங்கள்வி
ழைந்தன வென்னுளே.
81
 
குருசு யர்த்தநங் கோக்கும ரேசனார்
தரிச னப்பலன் சாற்றுதி யென்றியேல்
பரிச ழித்தமுற் சீவிய பாவத்தைக்
கரிச றுத்ததுன் கண்கண்ட சாக்ஷியே.
82
 
மைந்தன் மாசறு நீதியின் மாண்பினால்
தந்தை நீதித ரும்புவி ரக்ஷணை
சொந்த நீதிக றையுறத் தோய்தலின்
முந்து மாக்கினை முற்றுமென் றோர்ந்தனன்.
83
 
உள்ள நாளள வும்முல கத்தினிக்
கள்ள மின்மனச் சான்றினைக் காத்துநான்
வள்ள லார்திரு நாமம கிமையை
நள்ளி நாள்விடு நாட்டம்வந் துற்றதால்.
84
 
எத்தி றப்பகை நேரினு மென்னொரு
வித்த கன்கழல் விட்டிடு கிற்கிலன்
முத்தி கிட்லை வேனுமு றைமையிற்
செத்தி டற்குமோர் தீரம்வந் துற்றதால்.
85