பக்கம் எண் :

466

  எத்தை யித்தகு சிந்தனை யென்னுளே
முந்து வந்துமு ளைக்கும தோசொலாய்
விந்தை யாய்வினை யேற்றொழும் பாக்கிய
அந்த ணாவிய ருட்டிற மாண்டகாய்.

86
   
  வன்பு லத்தும டிந்தொழிந் தோர்சிலர்
என்பி ருங்குவைக் கின்னுயி ரூட்டிய
அன்பி னாயவ ருட்டொனி யேயலாற்
பின்பொ ரேதுவு மின்றெனப் பேசினான்.
87
   
  உற்ற நம்பிக்கை யென்னுமு யிர்த்துணை
சொற்ற வாய்மைச்சு வைமது ரந்திகழ்
பொற்ற சும்பமு தஞ்செவி போந்துகுத்
தற்ற வாகவ ருந்தின னாரியன்.
88
   
  உண்டு தேக்கியு ளக்களி யுற்றுநீ
தொண்டு பட்டச ரித்திரந் தோமறக்
கண்டு கொண்டனன் யாவுங்க ருதுறில்
அண்டர் கோனரு ளாக்கத்தி னாயவால்.
89
   
  ஆழி சூழுல கெங்குநம் மாண்டகை
வாழி யந்திரு நாமம கிமையே
ஊழி யும்முல வாதுநின் றோங்குக
வாழி வாழியென் றேகினர் மாதவர்.
90
   
                சோக பூமிப் படலம் முற்றிற்று.
   
 
அறிவீன வர்ச்சிதப் படலம்
 
   
  மாத வத்தர்ம கிழ்ச்சியோ டேமறைப்
போத முற்றுநற் புந்திதி கழ்ந்திட
மேத கக்கலை ஞானம்வி தந்துலாய்ப்
பாதை பற்றிப்ப டர்ந்தன ரென்பவே.
1
   
  அரிய கேடுதொக் காரஞர் மல்குதற்
பிரிய மென்னப்பெ யரிய நாட்டுளான்
உரிய மாதவ வேடத்தொ ளித்துளான்
தெரியுங் காலைதி ரிதரு சிந்தையான்.
2