பக்கம் எண் :

470

  தன்னிட் டன்னவன் சாற்றுவ தோர்கிலன்
முன்னிட் டாலுமு றையறி வானலன்
பின்னிட் டாவன பேசுது மாலினி
உன்னிட் டம்முரை யென்றன னொள்ளியோன்.

27
   
  நின்க ருத்திது வென்றுநி தானியாய்
நன்கு ரைத்தனை நம்பிந வின்றதே
தென்க ருத்தென வேகுதும் யாமெனாப்
பொன்கு லத்தல நோக்கினர் போயினார்.
28
   
               வேறு.
   
  போயினார் சோகமார் பூமியோ டேகதித்
தேயநூ னெறிவிடா திடையிடைப் படுகருஞ்
சீயமார் தடமலைச் சிகரியு மடவியுந்
தாயினார் பிற்பட முற்படுந் தகையினார்.
29
   
  தாகசோ கங்களாற் றளருவார் சிலபகல்
வேகயாத் திரையினான் மெலிகுவார் சிலபகல்
தேகநோய் கண்டுளந் தேம்புவார் சிலபகல்
கோகுலத் தவரொடுங் குலவுவார் சிலபகல்.
30
   
  வேதசாத் திரமெடுத் தோதுவார் விரகொடே
கீதகா னந்தொடுத் துருகுவார் கிடைதொறும்
ஏதமில் கருணை துய்த் திறையினங் கோமகன்
பாதபங் கயமலர் பரவுவார் பலமுறை.
31
   
  என்றிம்மண் ணுலகைவிட் டிடுவமென் றெள்ளுவார்
என்றியாம் வீடடைந் திடுவமென் றேகுவார்
என்றிளங் கோமகற் காண்டுமென் றேங்குவார்
என்றுசே வடிநிழல் புகுவமென் றினைகுவார்.
32
   
  சோகபூ மியினெறித் தொடரின்முன் றுறவுறத்
தேகம்வன் பொறையுறத் தெருமர லுறுகினும்
மாகமா நகரணித் துறுமெனா மகிழ்வுகொண்
டேகினா ரூகமோ டேதில்வே தியரரோ.
33
   
  சென்றுழிச் சென்றுழிச் செல்லுமன் னிழலென
நின்றுழி நின்றுழி நின்றறி வீனனும்
பின்றொடர்ந் தணுகினான் பிரிவுறா னறிவுறான்
துன்றுதீக் காய்குவார் சூழ்ச்சியிற் றொடருவான்.
34