| |
கருமமே
கண்ணெனக் கண்டுமுன் செலுமவர்
திருமிநோக் குழியறி வீனனைச் சேய்மைகண்
டருமையீ தெமைவிடா தணுகுமா றறிதுமென்
றொருமனத் திருவர்நின் றொல்லைகூ விளிகொள.
|
35 |
| |
|
|
| |
வீரியத
தொடும்விரைந் தவணுறும் விரகிலாப்
பூரியன் றனைமுகப் பொலிவொடேற் றுபசரித்
தாரியன் சுகம்வினா யண்டர்நா யகனொடுன்
காரியத் திறமெவன் கழறுகென் றுரைசெய்தான்.
|
36 |
| |
|
|
| |
தேசிகக்
குரவகேள் ஜீவர க்ஷணையெனக்
காசையுண் டுண்டுநம் பிக்கையு மகிலலோ
கேசனைச் சிந்தைவைத் தீறில்முத் தியைவிழைந்
தூசலா டுள்ளமு முண்டெனக் கென்றுமே.
|
37 |
| |
|
|
| |
சாற்றுமித்
தகையசா தனமெனக் குண்மையின்
மாற்றருந் தபையமெய்ம் மகிழ்வுளத் தூடுலாய்
ஊற்றிருந் தொழுகலி லுலகசம் பத்தெலாம்
போற்றிடா திவ்வழிப் போந்தனன் றுறவியாய். |
38 |
| |
|
|
| |
வேறு. |
|
| |
|
|
| |
என்றறி
வீனனீ தியம்பக் கேட்டலும்
வென்றியம் பகவனை விதேக முத்தியைக்
கன்றிய வலகையுங் கள்ள மார்க்கரும்
என்றுமுள் குவர்கதி யெய்தற் பாலரோ.
|
39
|
| |
|
|
| |
அரும்பெறன்
மெய்விசு வாசத் தாட்சியின்
பெரும்பய னினைப்பினி லடையப் பெட்புறும்
இரும்பியன் மனத்தசோம் பேறி யாத்துமம்
விரும்பியும் பெறாதென விள்ளும் வேதமே.
|
40 |
| |
|
|
| |
வெறுத்தன
னுலகவாழ் வெனவோர் வீரியம்
இறுத்தனை சான்றெது வென்னி லெம்பிநீ
கறுத்திடு மிதயமே கரியென் பாயிது
மறுத்திடற் பாலதா மரபு கேட்டியால்.
|
41 |
| |
|
|
| |
உற்பவ
தோடருக் குலக வாவறல்
அற்பமோ வன்றென வறிகி லாமையிற்
பற்பலர் முயன்றுபாழ் பட்டுத் தாமுடைக்
கற்பித வெண்ணத்துக் கவிழ்கின் றாரரோ.
|
42 |