| |
சேணுறு
நன்னெறிச் செலவு தீர்ந்தொரீஇக்
காணரு மாறுபா டாய கள்ளமுங்
கோணலுங் குலவிய குறுக்குத் தீவழி
நாணிலா தொழுகுத னரசு பாவமாம்.
|
51 |
| |
|
|
| |
புரையறு
புண்ணியப் புனிதத் தேமொழி
கரையறு கபட்டிரு தயத்தின் கள்ளத்தை
உரைபடு நடககையை யோர மின்றியே
வரையறைப் படுத்திய மரபு காண்டியால்.
|
52 |
| |
|
|
| |
இந்நெறி
யாய்மறை யியம்பு முண்மையைத்
தன்னகத் துணர்ந்தெலாஞ் சரியென் றொப்பிய
நன்னர்நெஞ் சேநலஞ் சுரக்கு நன்னடை
துன்னிநின் றுரப்படுஞ் சூழ்ச்சி காணிது.
|
53 |
| |
|
|
| |
தன்னுறு
கேட்டினை யுணரத் தக்கவந்
நன்னர்நெஞ் சுன்னத நாய கன்றனை
உன்னுறு விதஞ்சிறி துரைப்பல் கேளெனாப்
பன்னுவான் றொடங்கினன் பார மார்ததிகன்.
|
54 |
| |
|
|
| |
காமுறு
நினைவையட் கருத்தின் வஞ்சத்தைத்
தீமையை யியத்துட் டிணிந்த தோடத்தை
நாமுறு கேட்டினை நாடி நம்மினுங்
கோமக னறிவரென் றுளங்கொ திக்குமால்.
|
55
|
| |
|
|
| |
உண்டென
நினைக்குநம் முரிய நீதியை
மண்டுதுர்க் கந்தமாய் வரைவ ரல்லது
கண்டுளஞ் சகிப்பரோ கருத ரும்பர
மண்டலா திபரென மனம்ப தைக்குமால்.
|
56 |
| |
|
|
| |
கறுப்புறு
குட்டநோய் கழுமி யாக்கையின்
உறுப்பெலா மழுகிச்சீ யொழுகி லோகரால்
வெறுப்புறு புலையனே னசுத்த வெவ்வினை
பொறுப்பரோ புனிதரென் றுள்ளம் பொங்குமால்.
|
57 |
| |
|
|
| |
இத்திற
மறிகிலை யெம்பி யுன்னிலே
உத்தம விருதய முண்டென் றுள்ளுதி
வித்தக வொழுக்குளை யெனவி யக்குதி
யெத்தனை பிழையென வேழை யோர்கிலாய்.
|
58 |