பக்கம் எண் :

474

  நீதிமா னெனவுனை நினைக்கு மட்டுநீ
கோதிலாக் கிறிஸ்துவின் குறைவி னீதிகொண்
டாதியான் றிருச்சர ணடைகு வாயலை
ஏதமின் மெய்விசு வாச மெங்குளை.

59
   
  என்றுமெய் யுணர்வகத் தெழவி யம்பினான்
பொன்றிகழ்ந் தெனமிளிர் புகரி னன்மதி
ஒன்றிலிக் குடமென வொருங்கு போக்கியே
நன்றெது மறிகிலா னவிற்று வானரோ.
60
   
  பாவிகட் காநம பரம னோர்சுதன்
ஆவிவிட் டனரவற் கடங்கிக் கீழ்ப்படுந்
தாவரு நீதியாற் சாபம் போக்கியெங்
காவல ரெனையங்கி கரிப்ப ரென்பதும்.
61
   
  புண்ணிய மூர்த்திதம் புண்ணி யத்திலெற்
கண்ணிய பத்தியின் கருமம் யாவுமோர்
அண்ணலுக் கர்ப்பண மாகு மென்பதுந்
திண்ணிய வென்விசு வாசச் செவ்விகாண்.
62
   
  இவ்விசு வாசத்தி லியைந்த நீதியுஞ்
செவ்விய நீதியில் ஜீவ ரக்ஷையுங்
கவ்வையின் றாய்வரு கணக்கை யோர்கிலை
எவ்வகை திகைத்தனை யியம்பு கென்றனன்.
63
   
  எள்ளரு நல்லவித் திட்டென் செய்யினும்
அள்ளலோங் குவர்நில மளிக்கு மோபயன்
ஒள்ளிய நறுவிரை யுண்ட போதினும்
உள்ளியின் குணஞ்சிறி தொருவற் பாலதோ.
64
   
  எத்திற முடியினு மேழைக் கீண்டியான்
உத்தம மெய்விசு வாசத் துண்மையின்
வித்தக முறையினை விளக்க னன்றொனாச்
சித்தமுற் றாரணன் செப்பன் மேயினான்.
65
   
  உள்ளுறு முன்விசு வாசத் துண்மைதான்
வெள்ளென வெளுத்ததுன் னுரையின் மேயதுன்
பிள்ளைமை யிடையில்வந் துதித்த பேதைமை
கொள்ளும்வீண் பத்தியாய்க் குலவிற் றாமரோ.
66