பக்கம் எண் :

476

  கிரியைநோக் காமலே கிறிஸ்தி ரக்ஷகர்
புரைதபு புண்ணியப் பொலிவின் மாட்சியால்
குரைகடற் புவிக்கெலா மிரக்ஷை கூடுமேல்
வரைவதென் பாவத்தை மதிவ லோயென்றான்.
75
   
  ஆரியன் கேட்டறி வீன னுன்பெயர்
பேரியற் பொருளணுப் பிசகு றாமலுன்
பூரிய வாய்மொழி புலப்ப டுத்துமால்
நீரிய னிலத்திய லென்னு நீர்மைபோல்.
76
   
  கோதியன் மாந்தரைக் கோதி லாரென
நீதிமா னாக்கிடு நீதி மாண்பையும்
வேதனார் நீதிக்கு விலக்கி நற்கதி
ஈதலின் மரபையு மின்னுந் தேர்கிலை.
77
   
  இத்தகை யெனமுன மெடுத்தி யம்பிய
அத்தகு மெய்விசு வாச மாக்கிடும்
உத்தம பலன்களை யுசிதச செய்கையை
எத்தகு வனவென யாதுந் தேர்கிலை.
78
   
  என்னினுந் தெரிப்பலெம் மிருத யத்தினை
முன்னவன் கிறிஸ்துவின் மூல மாய்ப்பிரான்
சந்நிதிக் குய்த்திடுந் தயையன் பாதிய
பன்னருங் குணங்களைப் பாலித் தூட்டுமால்.
79
   
  தனதுட லுயிர்பொருள் தனக்கின் றாமென
அனவர தாதிபற் காக்கி யன்பினான்
மனமொழி மெய்களின் வணங்கி வாழ்த்தியும்
தினபர வசமுறச் செய்யு மாலரோ.
80
   
  சுருதியைச் சுருதியிற் றோன்று மார்க்கத்தைக்
கருதிமெய் யுணர்வொடு கலந்தம் மார்க்கத்து
வருதிருத் தொண்டரை மதித்துள் ளன்பினாற்
பருவரல் சகித்திடும் பான்மை நல்குமால்.
81
   
  சொற்றவித் துணைகொலோ சுகிர்தம் யாவுக்கும்
உற்றவோர் மூலமா யுயிருற் றோங்கிய
அற்றமின் மெய்விசு வாச வாக்கத்தைப்
பெற்றவ ரேநித்ய ஜீவப் பேறுளார்.
82