|
இன்னவகை
யாயவுணர் வாதியித யத்தில்
துன்னிநிலை பெற்றிடுமெ னிற்சுருதி கூறும்
நன்னெறிபு குத்துமென நம்பிகரு துற்றாய்
அந்நெறிதெ ரிப்பலென வாரணன்வி ரிப்பான்.
|
107 |
|
|
|
|
பாவபய
முன்னதப யம்பகரி ரண்டில்
ஒவலுறு முன்னையதி டைக்கிடையு யிர்த்துத்
தேவபய முள்ளுறுமெ னிற்றிகழ்மெய்ஞ் ஞானம்
மேவுமது வேவிதிவி லக்கின்வழி யுய்க்கும்.
|
108 |
|
|
|
|
தீத்தொழிலை
விட்டொருவு கென்றுமதி செப்பும்
மாத்தகைய ரக்ஷகரை நாடிவழி பட்டுன்
ஆத்துமவி ரக்ஷைபெறு கென்றறிவு றுத்துந்
தோத்திரஜெ பங்களைய கத்திடைதொ குக்கும்.
|
109 |
|
|
|
|
உத்தமநல்
லாவியறி வூட்டுமுறை பற்றிச்
சுத்தமன ரம்பியசு சீலசுகிர் தங்கள்
வித்தகவி வேகமின மேவியருள் வேத
சத்தியமு றைக்குநிலை தந்துதரிப் பிக்கும்.
|
110 |
|
|
|
|
இப்பெருந
லந்தருவ தேதுபய மதுவே
செப்பரிய தேவபய மற்றிதுதெ ளிந்தோர்
தப்பில்விசு வாசமுறை சார்ந்திறுதி காறும்
ஒப்பரிய வுத்தமவொழுக்கநெறி நிற்பார்.
|
111 |
|
|
|
|
செவ்விதிக
ழுத்தமப யத்தினுறு சீலம்
இவ்வகைய வென்றுதுணி யாதவறி வீனர்
வெவ்வியபி சாசுளம்வி ளைத்ததென வெண்ணி
அவ்வியல்கெ டுத்துளம டக்கியலை வாரால்.
|
112 |
|
|
|
|
ஐயவிது
காறுமறி வீனனியல் பேசி
மையதுறு சோகமணு காதுவழி வந்தேம்
வையகவ ழிக்கடையின் மல்குபெரு வாழ்க்கை
கையுறவ டுத்தனமி தோகடிகை தூரம்.
|
113 |
|
|
|
|
என்றகம
கிழ்ச்சியோடி சைந்துவழி யேகி
வென்றிபுனைவேரியன்வி ளம்பிடவி யந்து
நன்றுமிக நன்றெனநம் பிக்கையுந டந்தான்
ஒன்றியிரு வோருநெறி யேகினரு வந்தே.
|
114
|
|
|
|
|
அறிவீன
வர்ச்சிதப் படலம் முற்றிற்று |
|