பக்கம் எண் :

484

  நின்ற நன்னிலை தவறிப்பின் வாங்கிடு நீசர்
சென்று சென்றுதுன் மார்க்கத்துச் சிக்குணுஞ் சீர்கேள்
நன்று தெய்வத்தை மரணத்தை நரகவெஞ் சிறையை
ஒன்று முள்கிலா மறதியே மூலவுற் பாதம்.
24
   
  வேத கைதிக வொழுக்கெலா முறைமுறை விடுதல்
சாத கம்பெறு பாவத்தை யிச்சையைத் தழுவல்
பேத மைத்துணி கரங்கொடு பிரபஞ்ச மயக்கம்
ஒது சற்குரு மங்களை யொழிதலே யுபயம்.
25
   
  இனைய துர்க்குண சீலங்க ளிதயத்துக் கெழுமிக்
கனவு போன்றுசின் னாட்செலக் கருத்திடைக் கதித்து
நினைவ னோங்கிப்பின் வாக்கினுஞ் செயலினு நிலவி
வினையி னால்வர வரவெறிப் பட்டிடும் விரகாய்.
26
 
  மெய்க்கி றிஸ்தவர் கூட்டுற விழிவென விடுவர்
பொய்க்கு ருக்களென் றிகழுவ ரறவரைப் பொதிந்து
வைக்குந் தீமைக்குப் புகல்சொல மறையவ ருள்ளங்
கைக்கு ளேநரை முளைத்ததென் றெள்ளுவர் கடுகி.
27
   
  ஜெகந்த ழைத்திடு சிற்றின்பப் பிரியருல் லாசர்
முகந்து கொள்பொரு ளாசையர் முழுக்குடி வெறியர்
அகந்தை யாளர்பே ருண்டிய ராயமற் றிவரோ
டுகந்து நண்பராய்க் கூட்டுண்டு களிப்பரிங் குழன்றே.
28
   
  வைகல் சிற்சில கழியவும் வரம்பிலாப் பாவச் செய்க
லந்தனு போகத்தை விளைப்பதே செயலாய்
உய்க லாநெறிக் கோடியா டித்திரிந் துலவிப்
பொய்க லந்தவா ணாளிறப் பொன்றுவர் முடிவில்.
29
   
  இத்தி றத்தருக் கிரங்கிநம் மிரக்ஷணா மூர்த்தி
அத்து டக்கினின் றகற்றியுய் வருளில ராயின்
தத்த மக்குவைப் பாக்கிய கெடுநிதிச் சலதிக்
குத்தி யோகம்பெற் றுழல்வரா லூழியோ டூழி.
30
   
  என்றிவ் வாறுரைத் துறுநிலை கெட்டுப்பின் வாங்கித்
தன்று ணைப்பெரு மீட்பினி யுண்டெனத் தருக்கும்
பொன்று தீக்குண வியல்பெலாம் போகவிட் டிடுதுந்
துன்று சோகபூ மியினொடு மென்றனன் றூயோன்.
31