|
ஐந்தாவது
: இரக்ஷணிய பருவம்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
உடலுயிர்
கண்ணிமை யொத்த மாட்சியர்
படருறு மனந்தரின் படுகர் வைப்பையும்
நடலையர் பிரபஞ்ச நச்சு வாழக்கையின்
கடையையுங் கடந்துமெய் வாழவைக் கண்ணுற்றார்.
|
1 |
|
|
|
|
பல்வளங்
களுங்குழீஇப் பரம பாஷையின்
கல்வியுஞ் செல்வமுங் கவின்கொண் டோங்கிய
நல்வள நாட்டையூ டுருவி நம்பிரான்
மல்வள நகர்புகு மார்க்கஞ் சென்றதால்.
|
2 |
|
|
|
|
புயணிரை
பொதுளிய பொதும்ப ரும்பல
பயிர்வளஞ் செறிந் தெழில் படர்ந்த பாங்கரும்
வியனிலப் பரப்புநல் விரையுய் யானமும்
மயலறு காட்சியின் மயங்கு மாலது
|
3
|
|
|
|
|
வானமும்
பூமியு மிணைந்த மாண்பது
ஞானமும் நன்மையு நனிக தித்தது
தீனமு மீனமுஞ் சேர்வின் றாயதெவ்
வூனமும் பாவமு மொழிந்த நீரது.
|
4 |
|
|
|
|
ஆரிய
ரேகுடி யமையத் தக்கது
பூரிய ரவ்வழி புகப்பெறாதது
சூரியன் கதிரன வரதந் துன்னலால்
காரிரு ளெங்கணுங் காணொ ணாதது.
|
5
|