|
உலகபாசங்க
ளொழிந்துந்தம் முயிர்க்குயி ராகி
இலகுமாத்தும நேசர்பா லாசைமிக் கேங்கி
விலகி னேசபா சத்தினா விறுகுற விசிப்புண்
டலகி லாத்துமத் துயரடைந் தாக்கையுந் தளர்வாள்.
|
46 |
|
|
|
|
அருமை
நாயகன் மூட்டிய வசைநோய் தணியா
தெரிமு கத்துற்ற மெழுகென விளகியுள் ளுடைவாள்
திருமு கச்செவ்வி காண்குறுஞ் செவ்விநீ ளிதெனக்
கருமு கிற்றுளி காண்கிலாப் பயிரெனக் கரிவாள்.
|
47 |
|
|
|
|
உத்த
மந்திக ழன்புமிக் குயிர்க்குயிராய
வித்த கன்றிறத் தோங்கிய விரகதா பத்தாற்
சித்த சஞ்சலங் கதித்தலிற் றெருமர லுழந்து
பித்த ரிற்றிகைத் தலமரீஇ மருண்டுபே துறுவாள்.
|
48 |
|
|
|
|
பண்டு
பாரிடச் சூழலின் மாதவிப் பாங்கர்க்
கண்டு நெஞ்சையுங் கருத்தையுங் கவர்ந்துடன் மணந்து
கொண்டு வந்தொரு குறியிடத் துய்த்தருட் கனிவாய்
விண்ட மெய்த்திரு வாக்கெலா நினைந்துவெய் துயிர்ப்பாள்.
|
49 |
|
|
|
|
எது
செய்குதி ரென்னொரு நேசர்பா லெனக்காங்
காத னோய்க்கொரு மருந்துமுண் டோவர் கனிவாய்ப்
போது மல்குபுத் தமுதலா லென்றகம் புலந்து
மீது மீதெரி தவழ்ந்தென வெந்துபுண் படுவாள்.
|
50 |
|
|
|
|
அழுத
னெட்டுயிர்த் தழுங்குதல் சோருத லாவாவி
எழுதல் வீழுத விரங்குத விருகரங் கூப்பித்
தொழுத லாதிய றொழிலலாற் றொழிலின்றித் துயர்வாள்
உழுவ லன்பினிற் கொடிதியா துவரிசூ ழுலகில்.
|
51 |
|
|
|
|
மீக்கி
வளர்ந்தெழு காதலால் வெவ்விடர் பழுத்த
தீக்கொ டுஞ்சிறை மீட்டுமென் னாயகன் செறுக்கும்
ஆக்கை வெஞ்சிறை மீட்டெனை யாணைக்கில ரென்னாக்
கூக்கு ரற்படுத் தழுங்கித்தன் னாருயிர் குறையும்.
|
52
|
|
|
|
|
இருண்ட
பாதலப் படுகர்நின் றெடுத்தபே ரன்பை
உருண்ட சிந்தையின் மறந்தன னாலென வுள்ளித்
தெருண்டென் னாயகன் வரவிடு தூதொன்று சேரின்
மருண்ட புன்மைபோய் மாறுமென் றொருநிலை மதிக்கும்.
|
53
|