பக்கம் எண் :

495

  செயிர்த்த சிந்தையத் தெவ்வர்தி கைக்கவும்
அயிர்த்த தொண்டருக் காருயிர் மல்கவும்
பயிர்த்த பூம்பணைப் பள்ளிநின் றாண்டகை
உயிர்த்தெ ழுந்தமை யுள்ளியுள் ளூக்குவாள்.

70
   
  ஆழி யான்வலப் பாகத்த மர்ந்துளார்
வாழ வாழியென் றேத்தினும் வைகலோர்
ஊழி யாகத்தி கைத்துள்ளு டைந்தனள்
ஏழை யாத்துமப் பன்னியிங் கென்பவே.
71
   
  ஈது காலத்துன் னான்மவி ரக்ஷகர்
காத லித்துன்ப லன்களுங் கைக்கொடிங்
காத ரித்தடுக் கின்றன ராலெனக்
கோதில் சீயோன்கு மரிக்குக் கூறுமின்.
72
   
  என்றொர் சத்தமெ ழுந்தது விண்ணிடை
மன்றன் மங்கள மல்கிய பொன்னகர்
முன்றி னின்றுமு ழங்கிமு றைமுறை
துன்றெக் காளந்தொ னித்திடு மாறுபோல்.
73
   
  வானின் றுள்ளத்து வார்ந்தநல் வாக்கெனுந்
தேனுண் டார்ந்தன ளாத்துமச் சொல்வியும்
ஊன ளைந்தவு டற்றுயில் வீசினான்
ஞான மல்கிய மெய்ம்மறை நாவலன்.
74
   
  குருசு யர்த்தகு ரிசில்வ ருகையின்
பரிசு ணர்ந்துநம் பிக்கையும் பண்ணவ
தரிச னைக்கரு காயது தம்பிரான்
புரிசை மாநகர் போதுவம் யாமென்றான்.
75
   
  நன்றெ னாவிரு வோருந றும்பொழின்
மன்று ளார்விடை பெற்றுவந் தித்துடன்
சென்று கூடினர் செவ்விய நூனெறி
என்று மாறிலி றைவனை யேத்தியே.
76
   
  இத்த கைப்படு சம்பவம் யாவுங்கை
உய்த்த நெல்லிக்க னியிலு ணர்ந்தியான்
வித்த கர்ப்பின்றொ டர்ந்து விளைவினி
எத்தி றத்ததெ ரிவலென் றேகினேன்.
77