|
அஞ்ச
லித்துவ ரன்முறை யாரியர்
செஞ்செ வேவழி பற்றினர் திவ்விய
கஞ்சு கத்தரி ருவருங் காட்சிவிட்
டெஞ்சு றாதங்க வரொடு மேகினார்.
|
86 |
|
|
|
|
தர்மக்ஷேத்திரப்
படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
வித்தகந்
திகழு மான்ம விசாரிநம் பிக்கை யென்ற
உத்தம ரிருவர் ஜீவ சரிதத்தை யொருவா றாக
இத்தகைத் தென்று சொற்றா மினிவரு மரண நீந்தி
முத்திராஜ் ஜியத்தை யுற்ற முறைமையை மொழிது மன்றே.
|
1 |
|
|
|
|
பகலொளி
சதாநின் றோங்கும் பவித்திர தேசாந் தத்தில்
இகபர சந்தி யென்னு மிடரிருட் பிழம்பு தொக்கங்
ககவயிற் கடுகிச் செல்லு மடுதிரை மரண வாற்றைக்
ககனயாத் திரிகர் தத்தங் கண்களிற் றெரியக் கண்டார்.
|
2 |
|
|
|
|
கண்டுடன்
மனமுங் கண்ணுங் கலங்கினர் கவன்றா ரேனும்
உண்டெமக் குறுதி யென்னா வுள்ளுளே யூக்கித் தொண்டர்
மண்டலம் புரந்த ஜேசு மலரடிப் புணையைப் பற்றி
எண்டகு தேவா ரங்கொண் டிசைத்தனர் பிணிப்பார் நெஞ்சில். |
3 |
|
|
|