பக்கம் எண் :

498

4. அன்பார்கலி யருண்மாமழை யதடியார்க்கன வர
இன்பார்தரு கிருபாநிதி யிரக்ஷண்யபுண் ணியக்குன்
றுன்பாற்சரண் புகுந்தேனெனை யொறுக்காயகத் தொளிதந்
தென்பாற்பிழை பொறுத்தாதரித் தெந்தாய்கடைக் கணியே.

 
5. பெற்றாருடன் பிறந்தார்தமர் பெண்டீர்மக்கள் பெருநட்
புற்றாரினு முற்றார்சில ருலந்தாருயி ருலக்கப்
பெற்ரேனல னென்னோதிரு வுள்ளம்பெரு மானே
நற்றாயினு மினியாயுனை நாடக்கடைக் கணியே.
 
6. மரணாந்தவல் லிருண்மூடிமெய் வசமற்றுயிர் மறுகிக்
கரணங்களும் பொறியாதியுங் கலங்கித்திகைத் தயருந்
தருணங்கிறிஸ் தரசேயெனை யஞ்சேலெனத் தாங்கும்
அரணம்பிறி திலையேயுனை யல்லாற்கடைக் கணியே.
 
7. அந்தக்கர ணத்துள்ளன வறிவாயடி யேனில்
எந்தக்குறை யுளவென்னினு மெந்தாய்பொறுத் திரங்கிச்
சிந்தைக்கவ லையுந்தீர்த்தெனைத் திருத்திக்குணப் படுத்தி
அந்தத்திரு சரணீழல்தந் தருளிக்கடைக் கணியே.
 
8. கோதார்குணக் கேடன்மிகக் கொடியன்கொடும் பாவி
எதாகிலு நன்றொன்றில னெனினும்புறக் கணியா
தாதாரசர் வேசாவன வரதாவரு ணாதா
பாதாரவிந் தஞ்சேர்த்தெனைப் பரிவாய்க்கடைக் கணியே.
 
9. ஓசைக்கடற் புலிக்குன்ளெனை யொப்பாரொரு பாவி
ஆசைக்குமி ராரென்பதென் னகங்கண்டறி யுண்மை
ஈசற்கொரு புதல்வாவெனக் கிரக்ஷண்யபுண் ணியனே
பாசத்தளை விடுத்தெற்கருள் பாலிகடைக் கணியே.
 
10. ஒன்றுயொரு மூன்றாயொரு மூன்றும்மொரு முதலாய்
நின்றாயிது பரமார்த்தநிஷ் சருஷமிந்த நெறியை
நன்றாய்ந்துளந் திரும்பியுனை நாடிற்கதி நாடும்
என்றாயுனை யாடைந்தேனெனக் கிரங்கிக் கடைக்.
 
12 .பேராதர முடையாய்பெரி யோனேபெரு மானே
பாராதரித் துயிரீந்திர க்ஷணையீட்டிய பரனே
ஓராதர முனையன்றிலை யுயிர்போம்பொழு துடன்வந்
தாராதரம் புரிவாரெனக் கையாகடைக் கணியே.
 
13. கிருபாகர கருணாகர கிளர்புண்ணியப் பொருப்பே
பெருமாவடி யேன்செய்பிழை பொறுத்தென்னுயிர் பிரிகால்
மருவார்தரு குருசிற்றிகழ் வதனாம்புஜ மும்முன்
திருநாமமந் திரமும்மகந் திகழக்கடைக் கணியே
   
              தேவாரம் முற்றிற்று.