பக்கம் எண் :

500

  காலத்தைக் கருதி நின்றுட் பகையாகிக் கலக்கங் காட்டிக்
கோலத்தைக் குலைத்துக் கோறிக் கூரிருட் சூழ லுய்த்து
ஞாலத்தைக் கெடுக்கும் பொல்லா நச்சுத்தீ யலகை யேபோற்
சாலத்தை விளைக்கு மிந்தச் சதிபுரி மரண கங்கை.

12
   
  தேகதத் துவங்கள் குன்றுஞ் சீர்கெடு மையஞ் சேருஞ்
சோகமாம் பொறிபு லன்கள் சுழன்றந்தக் கரண மாயும்
ஆகமுங் கிடையா மேலிட் டாருயி ரொடுங்கு மந்தோ
மோகமா மரண கங்கை யூடுற முடுகுங் காலை.
13
   
  பாபத்தை விளைத்தோர்க் குற்றபயிரிடுங் கூலி தேவ
கோபத்தின் மிகுதி யிந்தக் குவலயத் தெவர்க்கு நீங்காச்
சாபத்தின் சமைவு மோசச் சற்பனைக் கிடங்கு மாய
ஆபத்தின் குகையா மிந்த வறக்கொடு மரணச் சூழல்.
14
   
  கெடுமதி வித்திற் றோன்றி யிச்சையிற் கிளம்பிப் பொல்லாக்
கடுமனத் தெழுமூ வாசைக் கவடுவிட் டஞராய்ப் பூத்துக்
கொடுவினைத் திரளைக் காய்த்துக் குலவிய பாவ தாருப்
படுபழங் கனிந்த சாறிப் பயங்கெழு மரண நீத்தம்.
15
   
  புரணபுன் ணியரே யார்க்கும் புகலிட மவர்பொற் பாத
அரணத்தைத் தேடித் தம்மை யடைக்கலப் படுத்தி யந்தக்
கரணவிந் தியங்க ளோடு காயத்தைப் புனிதமாக்கி
மரணத்தை நினைத்து வாழா மாந்தரே மாந்த மாந்தர்.
16
   
  பழிபடு மரண வாற்றைப் பாரித்துப் பகர்வ தெங்ஙன்
சுழிபடு மலைவாய்ப் பட்ட துரும்பெனத் துறைக்குண் மூழ்கி
அழிபடு ஜீவ ரேயவ் வவஸ்தையை யறிவ ரன்றி
மொழிபடு வனவிப் பாங்க ருத்தேச முறைமைத் தாமால்.
17
   
  ஆயுளுக் கெல்லை யாயு மவனிக்கோ ரந்த மாயும்
மீயுயர் கதிவா யிற்கு மிகவணித் தாயு மூடே பாயுமம்
மரண வாற்றின் படுகரை யடுத்தங் குற்றர்
நாயகன் பதத்தை நாடுக லந்திகழ் மறைவ லாளர்.
18
   
  அவ்வயி னொளிகோ டூத ராரணர் தம்மை நோக்கி
இவ்வரை காண்மின் சொற்ற விகபர சந்தி யாய
பௌவமற் றிதனை நீந்தி யக்கரைப் படுகி லீரேல்
திவ்விய நகர வாயிற் சேர்ந்திடப் பெறுவீ ரல்லீர்
19