|
உத்த
மந்திக ழொண்மதி படைத்தநம் பிக்காய்
மெத்த வாழ்கயத் தமிழுகின் றனன்றலை மேலாய்த்
தத்து பேரலை புரண்டெனை மூடுமாற் றரிப்பின்
றெத்தி றம்மினிக் கடைப்பிடித் துய்வலென் றிசைப்ப.
|
28
|
|
|
|
|
என்னை
யென்னைநீ கலங்குதி திடங்கொண்டமற் றெந்தாய்
நன்ன ரென்னிரு கால்சளு நனிதரிப் பனவால்
முன்ன ரேகிரு பாஸ்தமுண் டிங்ஙன முடுகிப்
பன்ன ருந்திரு வடித்துணை பற்றெனப் பகர்ந்தான்.
|
29
|
|
|
|
|
புந்தி
யுற்றநம் பிக்கைசொற் கேட்டுமெய்ப் போத
அந்த ணன்னென தாருயிர்க் கருந்துணை யாய
மைந்த பாவியே னுயிர்க்குறு மரணபந் தங்கள்
தொந்த மாய்ப்புடை விளைந்துசூழ்ந் தனவிங்கு தூயோய்.
|
30 |
|
|
|
|
ஊணு
வட்டுபால் தேனொடு பெருக்கெடுத் தோடும்
மாண ரும்புது வாளஞ்செறி மங்கல நாட்டைக்
காணி யாக்குவான் கருதினன் காணவுங் கிடையேன்
கோணி லாவுமிந் நதியிடைக் குப்புறீஇ யென்றான்.
|
31 |
|
|
|
|
முயங்கு
காரிருட் படலமவ் வொல்லையின் முடுகப்
பயங்க ரங்களுந் துன்பமு மேக்கமும் பற்ற
இயங்கி டும்பொறி புலன்களு மிருண்டுணர் வினைய
மயங்கி னானந்தக் கரணமு மாரியன் மாழ்கி.
|
32 |
|
|
|
|
செய்த
பாவங்க னினைந்துளந் தேம்பின னெனவும்
வெய்து துன்பமே லிடுதலின் விழுத்தகு முளத்தில்
எய்து மாறுத லெடுத்தினி தியம்பில னெனவும்
மெய்தி கழ்ந்தமுன் மொழிகளால் விளங்கிட வறிந்தேன்.
|
33 |
|
|
|
|
ஆரி
யன்றளர்ந் தயர்வுழி நம்பிக்கை யடுத்து
நீரி லேதலை நிமிர்த்துமூச் சியங்குற நிறுவிக்
கூரி யோய்கரை யணித்தெனப் பன்முறை கூவிச்
சீரி யோன்சிறி துணர்வுறத் தெருட்டுவா னானான்.
|
34 |
|
|
|
|
வெய்ய
வன்றனை மின்மினி யாக்கிவிண் மிளிருஞ்
செய்ய பொன்னக ரலங்கமுந் திருக்கடைச் சிறப்புந்
துய்ய ரோர்சிலர் நந்தமைக் கூட்டுவான் சுலவிக்
கைய தாகிய காட்சியுங் காண்டியீண் டென்றான்.
|
35 |