|
திட்ப
நூன்மதி யோயிங்கென் ஜீவநா யகனை
விட்பு லத்தர சன்றிரு மைந்தனை விளங்கக்
கட்பு லத்தெதிர் காணுகின் றனனெனக் கசிவுற்
றுட்பு லங்குவிந் தேத்தினன் கைதலை யுயர்த்தி.
|
44 |
|
|
|
|
அஞ்ச
லஞ்சனீ யானுனை மீட்டன னன்றே
எஞ்சு றாப்பெயர் தரித்தனன் யானுனக் கிதனாற்
செஞ்செ வேயெனக் குடையைநீ செல்லுழி யெங்குந்
தஞ்சம் யானுனக் குன்னுட னிருப்பதுஞ் சரதம்.
|
45 |
|
|
|
|
நதியிற்
செல்லினு நடுங்கலை நடுக்கலை யமையுங்
கொதிய ழற்கிடை நடப்பினுங் கொளுத்திடா துன்னை
அதிப னாகிய வாண்டகைத் தெய்வமு நினக்குக்
கதிந லந்தரு மிரக்ஷணைக் கடவுளும் யானே.
|
46
|
|
|
|
|
என்று
தம்பிரா னுரைத்தமெய் வாக்குளத் தெழுலும்
நன்று ரங்கொடு நம்பிக்கைக் கிவ்வுரை நவிற்ற
அன்ற லர்ந்தவா ரிசமென வகமுகங் கவினி
நின்றுரத்தன ரிருவருந் திடங்கொண்டு நிமிர்ந்தார்.
|
47 |
|
|
|
|
இகலெ
லாம்புற மிட்டன விருட்பிழம் பிரியப்
பகலொ ளிச்சுடர் திகழ்ந்தது பாரடிப் படுத்தி
ஜெகமி ருத்துவா நதியினைத் தீரமோ டுருவிப்
புகரின் முத்தியங் கரைபிடித் தேறினர் புலவர்.
|
48 |
|
|
|
|
வெங்கொ
டும்பசி தாகம்வன் பிணியிடர் மேற்கொள்
அங்கி யென்றிவை யாவையு மாற்றொடு போக்கித்
துங்க மேனிபொன் னுடைபர மானந்தந் துதைய
மங்களக்கரை யேறினர் வழுவிலா மறையோர்.
|
49 |
|
|
|
|
பத்தி
யோவிசு வாசமோ பகருமெய் யன்போ
சித்த சுத்தியோ சற்கரு மத்தினோர் திறனோ
முத்தி யின்கரை பிடித்தது யாதெனின் மூலம்
அத்த னைக்குநம் மாண்டகை கிருபையே யாமால்.
|
50 |
|
|
|
|
பொருளும்
பெண்டிரு மக்களும் பூகலத் துறவும்
மருளு றுத்துவெம் பிணிகரை யுடலொடு மறியும்
அருடந் துய்த்தநம் பிக்கையே யாருயிர்த் துணையாய்த்
தெருளு றுத்திநின் றுன்னத பதவியிற் சேர்க்கும்.
|
51 |