பக்கம் எண் :

506

   
7. அருளினாற் செங்கோ லளித்துமோ சேயை யனுப்பிய விமலனே
                                            போற்றி
இருளுறு மனத்தா ரிடைப்பல புதுமையியற்றிய வீசனே போற்றி
மருளுறு மிஸ்ரேல் சிறைதவிர்ந் தேகவரந்தரும் வள்ளலே
                                            போற்றி
தெருளிலாப் பார்வோன் ஜனத்தொடு மடியச் செங்கடல்
                                      விடுத்தவா
                                             போற்றி
 
8. மற்றவர் தமக்கு வழித்துணை யாகி வானமு தருனினாப் போற்றி
வெற்றியங் கிரிமீதுலகெலா நடுங்க விளங்கிடும் விபுதனே
                                            போற்றி
நற்றவன் வழியே விதிவிலக் சருளி நடத்திடு நம்பனே போற்றி
கொற்றமொ டிஸரேல் வளமிகு கானான் குடிபுக வருளினாய்
                                            போற்றி
 
9. மன்னர சுரிமை முறைநிறீ இக் குடிமை வளந்தரு மகிபனே
                                            போற்றி
அன்னைபோற் கசிந்துந்தந்தைபோற் கடிந்துமாம்பரி
                                     சுணர்த்தினாய்
                                            போற்றி
நன்னெறி யிகந்த மன்னரைச் செகுத்து நலம்புனை நம்பனே
                                            போற்றி
செந்நெறிச் சென்றார்க்குறு துணையாய திரியேக தெய்வமே
                                            போற்றி
 
10. கோலைநீத் தொருசெங்கோலிசாய் மகற்குக் கொடுத்தருள்                                        கொற்றவா
                                           போற்றி
சீலமா யவன்சொன் னயந்துசங்கீதஞ் செவிமடுத் துகந்தவா
                                           போற்றி
சாலமோன் தேவா லயமுவந் தருளித் தரித்திடுந் தற்பரா
                                           போற்றி
மேலைநாள் யூக ஜனஞ்சிறைப் படவும் மீளவு மருளினாய்
                                           போற்றி.
 
11. திருவுளக் குறிப்பைத் தீர்க்காரன் முன்னந் தெரித்திடுந்தீர்த்தனே
                                             போற்றி
வருவர்மே ஷியக்கென் றடியருக் கினியவாக்கமு தூட்டினாய்
                                             போற்றி
பொருவரு மான்ம ரக்ஷைமார்க்கத்தைப் புதுக்கிய புராதனா
                                             போற்றி
சருவலோகமுமீ டேறவோர் மகவைத் தந்தருள் தந்தையே
    
                                         போற்றி.
                 (உத்தர சுருதி. )
12. ஆதிமெய்த் திருவாக் காய வகிலகா ரணனே போற்றி
கோதிலாக் குணங்கள் பூத்த குவலயத் தொளியே போற்றி
மாதுவித் தாகி யிந்த மாநிலம் புரப்ப லென்று
தாதைபாற் பரிந்து நின்ற தற்பரா போற்றி போற்றி
.
 
13. பன்னரு மஹிமை யோடு பண்ணவர் பரவி யேத்த
உன்னரும் பரமா காயத் துச்சிவீற் றிருந்தாய் போற்றி
புன்னரர் பொருட்டுப் பாவப் புலையுல கத்து மேவிக்
கன்னிபா லுதித்தாய் போற்றி கருணைவா ரிதியே போற்றி.
 
14. வறிதுபுல் லணையிற் கந்தை வனைந்தொரு குழவி யாகி
அறிதுயி லமர்ந்தாய் போற்றி யலகில்பல் லுயிரை யூட்டிச்
செறிதரு பசிக்காற்றாது தேம்பிநின் றழுதாய் போற்றி
நெறிதிக ழறவோ ராயர் நேர்ந்தநின் மலனே போற்றி.
 
15. ஈசனா ருரைகொண் டேகி யெகிப்துநா டடைந்து மீண்டு
நாசரேத் தூர்வந் துற்ற நசரேய நம்பி போற்றி
ஆசற வளர்ந்து பெற்றோர்க் கமைந்திடு மைய போற்றி
தேசிக ஞான தீக்ஷை செவ்விதி னடைந்தாய் போற்றி.