|
வேறு.
|
|
|
|
|
|
மாய
மின்மனத் தீரிந்த மாதலந்
தூய ராகித்தொ ழும்புபட் டார்க்கெலாந்
தாய கம்புரை யத்தரும் பேறெலாஞ்
சீயொ னென்னுந்தி ருமலை காண்டிரால்.
|
28 |
|
|
|
|
மாண்ட
குந்திரு மாமலை யுச்சியில்
ஈண்டு ஜோதிப்ப ரமவெ ருசலேங்
காண்ட குந்திரு மாநகர்க் காட்சிதான்
சேண்ட யங்கித்தி கழ்வது காண்டிரால்.
|
29 |
|
|
|
|
உத்தமத்திருத்
தொண்டங்கு ஞற்றிடு
விதத கந்திகழ் மெய்ப்பரி சுத்தராம்
நித்ய சூரிகள் சங்கநி ரைநிரை
பத்தி யிற்றிகழ் கின்றன பார்த்திரால்.
|
30 |
|
|
|
|
ஜீவபுத்தகத்
துப்பெயர் தீட்டியும்
ஆவ லித்தமு தற்பல னாகியுந்
தேவ தொண்டுக்க மைந்ததி ருக்குழாம்
மேவு சங்கவி லாசமுங் காண்டிரால்.
|
31 |
|
|
|
|
போத
மல்குசம் பூரண மாய்ப்பலன்
மேத கப்பெற்ற மேம்படு வித்தக
நீதி மான்களி னாவிநி கழ்ந்திடும்
மாத லத்தின்ம கிமையும் பார்த்திரால்.
|
32 |
|
|
|
|
உன்ன
தத்திரி யேகரொ ருதிருச்
சந்நி தானம கிமைத ழைத்திடும்
பன்ன ரும்பர லோகப வித்திரப்
பொன்னி லத்துப்பு துமையும் பார்த்திரால்.
|
33 |
|
|
|
|
இத்தி
ருத்தகு வானவி ராஜ்ஜியத்
துத்த மக்குடி யாகவந் தூன்றினீர்
நித்ய ஜீவவி ருக்கநி லவுறுஞ்
சித்தி ரப்பர தீசினிச் சேருவீர்.
|
34
|
|
|
|
|
ஜீவ
மாநதி யாடியுந் திவ்விய
ஜீவ நாட்டுடை சீரணி தாங்கியும்
ஜீவ நாயகன் சேவடி போற்றியும்
ஜீவ மாக்கனி யுண்டுந்தி கழுவீர்.
|
35
|