|
விண்ண
வர்க்கர சன்றிரு மேனியைக்
கண்ணிற் கண்டுக ளித்திடுங் கண்மலர்
அண்ண லார்திரு வாக்கைநும் மஞசெவி
உண்ணு மாரமிர் தாகவு வக்குமால்.
|
44 |
|
|
|
|
முன்னிங்
கும்மின்மு யங்கிய நேசரைச்
சந்நி தானத்துக் கண்டுத ளிர்ப்பிரால்
இன்ன வாறிங்கி னிவரு தூயரை
நன்ன ரேற்றுந யந்தும கிழுவீர்.
|
45 |
|
|
|
|
அகில
லோகத்த ரசன்பு னிதமார்
ககன கோளத்து லவுமக் காலையில்
புகரி லாமணிப் பூணணி பூண்டுடன்
மகிமை யோடுமு லவிவ ருவிரால்.
|
46 |
|
|
|
|
காக
ளத்தொனி காட்டிக்க டவுளார்
மேக வாகன மீதுவி ளங்கியப்
போக பூமிந டுப்புரி போதுநீர்
ஓகை யோடங்க வரோடு றுவிரால்.
|
47 |
|
|
|
|
ஈச
னார்நடுத் தீர்வையி யம்பநீ
தாச னத்தின மருமக் காலைநீர்
மாச னத்திர ளுக்குமுன் வந்தரு
காச னத்தினி தாகவ மருவீர்.
|
48 |
|
|
|
|
பூத
லத்தைக்கெ டுத்தபொல் லாங்குடைத்
தூத ருக்கும் மார்க்கத்தொ குதிக்கும்
நாதன் றண்டனைத் தீர்ப்புந வில்கையில்
நீத சான்றுரை நீருநி கழ்த்துவீர்.
|
49 |
|
|
|
|
புதிய
வானும்பு வியும்ப டைத்துமேல்
விதிநி டேதம்வி தித்துநம் மாண்டகை
அதிப னாவர சாளுமக் காலைநீர்
பதிதொ றும்பரி பாலக ராகுவீர்.
|
50 |
|
|
|
|
இத்தி
றத்தவி னியும்ம நுபவத்
துய்த்து ணர்ந்தறி மின்னுரை யாலிதை
வித்த ரித்துரைக் கப்பெறு வேமலேம்
எத்தி றக்குறை வும்மிலை யிண்டென்றார்.
|
51 |