பக்கம் எண் :

517

  கின்னரந் தம்புரு வீணை கேழ்கிளர்
இன்னரம்புளரிசை யெழால்மி டற்றொலி
மன்னிய பெருஞ்சுர மண்ட லத்தொனி
பொன்னுல கெங்கணும் பொதுளிற் றென்பவே.

60
   
  உத்தம கிறிஸ்தவர்க் கோகை பேசிநீர்
அத்தரை யுலகைவிட் டளவில் பேரின்பப்
புத்துல கடைந்ததே புதுமை யாமெனா
வித்தக வீணையை மீட்டிப் பாடுவார்.
61
   
  பன்னரு மகாத்துமர் பலரொ ருங்குதொக்
கந்நிலை யுவந்துப சரித்தங் காத்துமப்
பன்னிய ரைக்கொடு பரம நாயகன்
சந்நிதி மணவறை சாரு வேமெனா.
62
   
  எல்லையில் வான்கண மெங்குமீண்டியே
தொல்லையம் பரனடி தொழுது வாழ்த்தவும்
நல்லிசைக் கருவியி னாத மோங்கவும்
பல்லிய முழுங்கவும் பாடி யேகுவார்.
63
   
  சாதுசங் கத்தவர் தம்மி லித்தகு
மாதவ ரிருவர்வந் தடைந்த மாட்சியும்
ஆதரித் தெதிர்கொளப் பெற்ற வாக்கமுங்
காதலித் துவகையிற் கனிந்து பேசுவார்.
64
   
  எங்கணுந் தண்ணில வெறிக்கும் பூரண
திங்களுக் களவிலை யெனினுஞ் சிந்தையிற்
பொங்குநீர் நிலையெலாம் பூத்த லர்ந்தன
செங்கம லங்களுஞ் செப்பற் பாலதென்.
65
   
  காட்சியின் புதுமையு மதுர கானத்தின்
ஆட்சியுங் கண்டுகேட் டறிந்த வாரணர்
மாட்சிசான் முத்தியுண் மருவி னாமெனச்
சூழ்ச்சிசெய் துவகையுட் டுதைந்து போயினார்.
66
   
  ஓதரு மித்தகு புனித வுத்தம
சாதுசங் கத்துடன் றரிக்கப் பெற்றனம்
மாதயை மாதயை யெனம கிழ்ச்சியாற்
போதமற் றனரெனப் பொருமி விம்மினார்.
67