| |
இலகுமோ
க்ஷானந்த மோவி தென்கொலாம்
உலகசிற் றின்பெலா மொழியு மேயென்பர்
அலகிலவ் வானந்த வளவைக் காட்டிடற்
குலகில்வே றெதையெடுத் துவமை கூறுகேன்.
|
68 |
| |
|
|
| |
உன்னதா
னந்தமென் றுரைப்ப தன்றிமற்
றென்னதான் யாவர்தா மெண்ணி யெண்ணி மன்
சொன்னபோ தினுமணுத் துணைக்குப் போதுமோ
தன்னிகர் தம்பிரான் றருமப் பேற்றிற்கே.
|
69 |
| |
|
|
| |
இனைத்தென
வாக்கினுக் கதீத மெண்ணவும்
மனத்தினுக் கதீதமவ் வரம்பி லானந்தம்
எனைத்துணை யளவைமற் றெடுத்துக் காட்டினுந்
தினைத்துணை யினுமலை பெரிதென் சீர்மையாம்.
|
70 |
| |
|
|
| |
வேறு. |
|
| |
|
|
| |
பன்ன
ரும்பவித் திரக்குழாம் பல்லியந் துவைப்ப
மன்னர் மன்னரை யெதிர்கொளு மாண்பினு மாண
நன்னர் வேதியர் தமையெதிர் கொண்டுட னடத்தித்
துன்னி னார்முத்தி மாநகர்த் தோரண வாயில்.
|
71 |
| |
|
|
| |
கோக்கு
மாரன்செங் கோன்முறைக் குறையுளாய்க் குலவி
மேக்கு யர்ந்தமா மகிமையின் கோபுரம் விளங்கிப்
பாக்கி யம்பொதிந் தனவர தானந்தம் பயிலும்
மோக்க வாயிலைக் கண்டனர் முதிர்கடைப் பிடியோர்.
|
72 |
| |
|
|
| |
கண்டு
காதலித் திறைஞ்சினர் கருணையங் கடற்குப்
பண்டுண் டாக்கிய வருண்மடை யாமெனப் பரிவில்
அண்டர் கோன்றிரு வடித்துணை யன்பொடு பரவி
விண்டு தோத்திரம் புரிந்தனர் விநயபூ ருவமாய்.
|
73 |
| |
|
|
| |
மன்னு
மித்திரு நகர்க்குளிவ் வாயிலின் வழியாய்த்
துன்னி நித்திய ஜீவதா ருவைச்சுதந் தரிக்கப்
பன்னு நன்னடை பற்றியோர் பாக்கிய ரென்னாப்
பொன்னே ழுத்துறு புதுமைகண் டுளமகிழ் பூத்தார்.
|
74 |
| |
|
|
| |
ஆங்க
டுத்திரு தூதரு மையன்மீ ரணிகொண்
டோங்கு பொற்கடை வாயிலைத் திறக்கென வுரித்திற்
பாங்கொ டும்விளி மின்னெனப் பணித்தலும் பனவர்
வீங்கு மெய்யுணர் வொடுதட்டி விளிக்கலுற் றனரால்.
|
75 |