பக்கம் எண் :

52

கண்கவர் வனப்பி னாய காட்சிகண் டதிச யிப்பர்
பண்கவர் மிதுன கீதப் பாட்டொலி செவிம டுப்பர்
விண்கவ ருலகைத் தந்த விந்தையை வியந்து பேசி
எண்கவ ரரசைப் போற்றி யிறைஞ்சிவாழ்த் தெடுப்பர் மன்னோ.

18
   

மருமலி துணர்ப்பூஞ் சோலை மாநிலக் கிழவர் தம்மைப்
பருவர லணுகு றாமே பாலிக்குங் கருணைத் தாய்போல்
கருவிழிக் கிமைபோ லன்பிற் கங்குலும் பகலுங் காத்துத்
திருவருட் கடவுள் வேந்தன் ஜெகதலம் புரக்குங் காலை.

19
   

                         சிருஷ்டிப்படலம் முற்றிற்று.

 

 
   
7. இராஜ துரோகப்படலம்
 
 
   

நித்திய ராஜ ரீக நிலவுவா னகத்தி லென்றும்
பத்தியாய்ப் பணிசெய் துற்ற பண்ணவர் குழாத்து ணின்றும்
சத்துரு வாகிக் கீழே தள்ளுண்டு கிடந்து பேயால்
மித்திர பேத மென்னும் வினையிடை முளைத்த தந்தோ.

1
   

விள்ளரு மரச னீதி விலக்கலால் மலபரு தாலத்
தள்ளுண்டு கிடந்த பேயி னதிபதி யழிம்ப
னென்னுங் கள்ளனுள் ளழன்று சீறிக் காசினி ககன வட்டத்
துள்ளுறு மரபை யோர்ந்தங் குசாவின னுருவ மாறி.

2
   

கண்டன னென்ப மன்னோ கருணையங் கடல்வ ளாகத்
தொண்டிறல் படைத்த கோமா னொருதனித் திகிரி யுய்த்த
மண்டலப் பரப்பைச் சூழ்ந்த வாரிதிப் பெருக்கை வார்ந்த
தண்டலைப் பொழிலைப் பாயுந் தடநதி வளத்தை யெல்லாம்.

3
   

இடந்தொறுஞ் சென்று நோக்கி யிப்பெரும் போகந் துய்ப்பான்
மடங்கலே றனையார் தம்மை வஞ்சத்தா லடர்த்திவ் வையம்
அடங்கலு மடிப்படுத்தி யரசியல் புரிவ லென்னா
விடங்கிள ரரவிற் புக்கான் மேதையா ரிருந்த சூழல்.

4
   

பேயகம் புகுந்த போதே பிரபஞ்ச மென்னு நாமம்
ஆயது சமயந் தேடி யரிவையை மதிம ருட்டி
நாயகன் றனையு மந்த நாரியைக் கொண்டே மாற்றிச்
சேயுய ரிறைவ னாணை செகுக்கவுஞ் செய்தான் பாவி.

5