பக்கம் எண் :

53

 

தன்னையே கெடுத்தான் முன்னந் தற்பெரு மையினா லந்தோ
பின்னையும் பொறாமை யாலே பிறரையுங் கெடுத்தான் வாளா
மன்னுயிர்த் தொகுதி கும்பி மலக்கிடங் களைய வைத்தான்
என்னையீ தென்னை யென்கே னிருநிலத் திறுக்க கேட்டை.

6
   
 

தன்னொரு மகவைத் தந்த தற்பிர னன்பு வாழி
பொன்னுல கிழிந்து வந்த புண்ணியம் வாழி வாழி
மன்னுயிர் புரக்க வந்த மனுமகன் சரணம் வாழி
என்னையிந் நிலைபா லிக்கு மெம்பிரான் கிருபை வாழி.

7
   
 

கற்பனை கடந்த போதே கற்பனை கடந்து நின்ற
தற்பர னீதி பொங்கித் தழலெழச் சினவி நீட
அற்புத கருணை பொங்கி யாரழ லவிக்க நாடப்
பொற்புறு குமா னேர்ந்து நடுவராய்ப் புகல லுற்றார்.      

8
   
 

மற்றிம்மா னிடங்க ளெந்தாய் வஞ்சக வலகை யேய்த்த
சொற்றலை நின்று ராஜ துரோகியா யினரவ் வெல்லாக்
குற்றமுந் தண்டம் யாவுங் குறிக்கொண்டுத் தரிப்பல் யானே
நற்றச விதிகைக் கொண்டிங் கீட்டுவல் நலங்கொ ணீதி.

9
   
 

நிண்ணய மிதனை யோர்ந்து நிரையபா தலத்துக் கேகும்
மண்ணுல கரைமன் னித்து ரக்ஷணை வழங்கிக் காத்துத்
தண்ணளி புரிக யானே தராதலத் திழிந்தங் கீட்டும்
புண்ணிய பலத்தா லீதென் பொருத்தனை யாகு மைய.

10
   
 

குருதியைக் கொடுத்து ஜீவ கோடியை மீட்ப லென்ன
ஒருதிருக் குமர னன்பி னுரைதிருச் செவியிற் சாரக்
கருதருங் கடவுள் வேந்தன் கருணையாற் கருணை மைந்தன்
திருவுள மாக வென்று செப்பிமற் றிதனைச் செய்தார். 

11
   
 

வானகத் தரசன் றம்போல் வையகத் தரசு செய்வான்
தானென வுதித்த மைந்தன் றனைத்தனி மௌலிசூட்டி
ஞானமுத் திரையு நல்கி நனிதவ வுயர்த்தி வைத்தார்
மானிடம் புரந்து பேயின் வன்றலை சிதைக்க வென்றே.

12
 
 

சற்பனைப் பேச்சை நம்பிச் சதிவழி புகுந்து மக்காள்
கற்பிள வொத்தீ ரந்தோ கடுகிய மரண வாற்றின்
வற்புறு திரையின் மூழ்கி மாண்டுட வழிவீ ரென்றார்
தற்பத மிழந்த மாந்தர் தலையிழி சிகையே யன்றோ.

13