சாமித்து
ரோகஞ் செய்யத் தகுங்கரு விகளை மண்ணில்
சேமித்து நம்மோர் மைந்தன் றிருவடித் தொழும்பு பட்டு
நேமித்த நெறியைப் பற்றி நித்திய ஜீவ நாட்டைக்
காமித்து வம்மின் றாழ்க்கிற் கைவரு மோச நாசம்.
|
14 |
|
|
மித்திர
நலத்தை வீசி விதிவிலக் கெறிந் தெமக்குச்
சத்துரு வாகி னீர்நுந் தரிப்பிணி நாச தேசம்
நித்திய ஜீவ நாட்டி னெறிகடைப் பிடியீ ராயில்
அத்தலங் கோபத் தீயி லவிவது சரத மென்னா.
|
15 |
|
|
சாதனம்
விளங்கத் தீட்டித் தரணியிற் காலந் தோறும்
மேதகை யவரைக் கொண்டு விளம்பரப் படுத்தச் செய்தார்
நீதியா யகண்டா கார நிறைந்தபே ரருளா யென்றும்
பேதியா நிருவி காரப் பெருந்தகை பரம ராஜன்.
|
16 |
|
|
இராஜ
துரோகப்படலம் முற்றிற்று.
|
|
|
|
|
|
புனித சேத்திரத்
தமர்ந்துள பூருவ குடிகள்
கனிதந் தாக்கிய தீவினை யாமெனக் கலித்து
மனித மாட்சியை வரைந்தல கைக்குண மருவி
நனிதி ரிந்தனர் விலங்கென நாசதே சத்தில்.
|
1 |
|
|
ஐந்தெ னும்பொறி
புலனந்தக் கரணமாத் துமஞ்சேர்ந்
திந்த மானிடப் பிறப்புமெந் நலங்களு மியைந்தும்
பந்த மாங்கனி யாலந்த நலமெலாம் பறிபோய்த்
தொந்த மாம்பெருங் கேட்டொடு மரணமுஞ் சூழ்ந்த.
|
2 |
|
|
உறைக லந்துதீஞ்
சுவையபா லொருங்கறக் கெடல்போல்
முறையி னீங்கிய கனிச்சுவை யுலகெலா முயங்கிக்
கறையி னாக்கிலெம் மரணத்தின் கரையறு துன்பச்
சிறையி னுய்த்தது ஜென்மசஞ் சிதத்தொடு செறிந்து.
|
3 |
|
|
பாவ காரியர்
திசைதொறுங் குழுமினர் பரம்பி
ஈவி ரக்கமி லிராக்ஷத ரெனப்பெய ரெடுத்துத்
தீவி னைக்குநட் பாளராய்ச் செருமினர்க் குள்ளுந்
தேவ புத்திர ராயினர் சிலரருட் செயலால்.
|
4 |