|
தேவாரம். |
|
|
|
I.
உண்மை வற்புறுத்தல் (பண், பழம் பஞ்சுரம்) |
|
|
| 1. |
தொக்கபாவமன்
னிப்புநித்திய ஜீவநன்மையுஞ் சுகிர்தமும்
மிக்கபேரின்ப வீடுநங்கிறிஸ் தியேசுவைவிசு வாசிக்கிற்
கைக்குள்வந்ததிங் கையமொன்றிலை கண்டுகேட்டுணர்ந்
துலகுளீர்
தக்கவாறுநன் றாய்மின்ரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
|
|
|
| 2. |
தேவதேவத்ரி
யேகதெய்விக ஜேசுவின்றிரு நாமமே
ஜீவரக்ஷணை நல்குதிவ்விய சீலமார்திரு மந்திரம்
ஆவதன்றிமற் றில்லைவேறிதை யாயுமின் விரைந் துலகுளீர்
தாவரும்பர மார்த்தரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
|
|
|
| 3. |
இம்பர்
மெய்ப்புரு ஷார்த்தமீட்டுதற் கேற்றநல்வழி யீசனை
நம்பியன்புசெய் வார்க்கெலாமழி யாதபேரின்ப நன்னிதி
உம்பர் நோக்குசன் மார்க்கமாதியு ணர்த்துசற்குரு வுலகுளீர்
தம்பிரான்கதி கூட்டுரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
|
|
|
| 4. |
எமையுயக்கொண்ட
வீசனாதிதொட் டெழுதுவித்தது மிம்பரிற்
சிமையத்தேயலர் தீபம்போன்றுள திருச்சபைப்குய்த்துத்
தெருட்டலும்
உமையடுத்தடுத் துண்மைகூறிவற் புறுத்திநிற்பது முலகுளீர்
சமையபாஷகர னாமிரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
|