பக்கம் எண் :

524

5. முத்துவத்தனி யேகவஸ்துவு மோக்ஷமுந்தரு மார்த்தமும்
நித்யஜீவனும் ஜீவமார்க்கமு நெறிதிரிந்துசெல் பாவமும்
சித்தசஞ்சலப் படுகரும்முள தீர்க்கசத்திய முலகுளீர்
சத்தியந்தவ றாதரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.

 
   
6. ஆதிநித்திய மாத்துமாமற்ற வகிலம்யாவும நித்தியம்
பூதலத்திறந் தோருயிர்த்தெழுந் தெம்பிரானடுப் புரியுநாள்
நீதியாய்வரு பலனுநித்திய நீக்கமின்றுல கத்துளீர்
சாதுசங்கத்தைச் சார்மின்ரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
 
   
7. கனிதனீர்மையிற் கிறிஸதுவின்றிருந் கடைக்கணுக்கிலக் காகிடில்
துனிதவிர்ந்திடும் பாவசங்கடந் தொலையுநுந்நடை சுகிர்தமாம்
புனிதநன்மனம் பொருந்துமன்புனம் பொங்கிமேலிடு முலகுளீர்
தனிதமாரருண் மல்கும்ரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
 
   
8. கிழக்கெழுஞ்சுடர் போலச்சத்தியங் கிளரக்கண்டினுங் கேதமார்
பழக்கமானதீ வினையைவேரறப் படுத்துநன்னெறி பற்றிடீர்
வழக்குறைத்துவா ணாளைப்போக்குதன் மதிகொலோவுல
                                       கத்துளீர்
சழக்கைவிட்டுளந் திரும்பும்ரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.

 
   
9. சேயருந்தம ருஞ்சிநேகருந் தேடுபல்பொருட் செல்வமுங்
காயநீத்துயிர் பிரியுங்காலொரு கடிகைபின்வரக் காண்டுமோ
நாயகன்கிறிஸ் தியேசுவேமறு மைக்குநற்றுணை யுலகுளீர்
தாயகம்பிறி தில்லைரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
 
   
10. நம்மைநோக்கிய தண்டனைக்கொரு நடுவராய்நின்று தாங்கியுஞ்
செம்மையிற்றிறம் பாதுநித்திய ஜீவபுண்ணியந் திரட்டியும்
இம்மைக்கும் மறுமைக்குநன்மையுண் டாகவிங்குதித் துலகுளீர்
தம்மையுந்தந்த சாமிரக்ஷண்ய சமயநிர்ணயந் தானிதே.
 
   
            உண்மை வற்புறுத்தல் முற்றிற்று.  
   
         II. அந்திப்பலி. (பண், பழம் பஞ்சுரம்.)  
   
1. தேவதேவத்ரி யேகதோத்திரம் ஜேசுநாயக தோத்திரம்
பாவகாரிசி ரஞ்சிதைத்தெழு பாதபங்கஜதோத்திரம்
ஜீவபாதையில் வழிநடத்திடுந் திவ்யவாத்தும தோத்திரம்
ஆவலோடுனக் கனந்ததோத்திர மகிலலோகசர் வேசனே.
 
   
2. அலகிலாவருள் ஜோதியேபக லருணனாரொளி யத்தமித்
துலகெலாமிருட் படலமுடிய துனக்கந்திப்பலி யுதவுவான்
இலகுநின்கிரு பாசனத்தைவந் தெய்தினேனித யத்தொளி
அலரவைத்தெனக் காவிதந்தரு ளகிலலோகசர் வேசனே.
 
   
3. உடைப்பெரும்பொருள் கல்விநட்புற வுரிமையாவுமிவ்
                                   வுடலொடும்
இடைக்கணின்றிடு முதவுமோர்துணை யென்றுநீயடி யேற்கியான்
படைக்கநின்றழற் படுகருய்க்குமென் பாவமஞ்சியுன் பாதத்தே
அடைக்கலம்புகுந் தேன்கடைக்கணி யகிலலோகசர் வேசனே.