| 4 |
நஞ்சமல்கிய
வஞ்சவல்வினைநச்சிநச்சியென் னாளெலாங்
கிஞ்சித்தும்பய னின்றியோய்ந்தன கெஞ்சவந்துனைக் கிட்டினேன்
தஞ்சமுன்னிரு தஞ்சநாண்மலர்ச் சரணலாற்புக வரணிலேன்
அஞ்சலென்றெனை யாதரித்தரு ளகிலலோகசர் வேசனே.
|
|
|
| 5.
|
பையுளேனுனைப்
பற்றிலேன்பயன் பட்டிடேனொரு பாவியான்
கையதாகிய ஜீவபுஸ்தகக் கணக்கிலென்பெயர் காண்பதோ
துய்யவாவியை யருளியென்குண தோடம்யாவையு நீக்கியாள்
ஐயதாரகம் யாதுமின்றெனக் ககிலலோகசர் வேசனே.
|
|
|
| 6. |
ஓரணுத்துணை
மதியிலாதுசிற் றின்பமுண்டுலைக் கமடமாய்க்
காரணத்தைவிட் டலகையோடுகை கோத்தெனாயுள்க ழிந்ததே
மாரணத்துறை நேரினித்திய மங்களக்கரை வாய்க்குமோ
ஆரணத்துறை காட்டியெற்கரு ளகிலலோகசர் வேசனே.
|
|
|
| 7. |
துன்புறழ்ந்துறழ்ந்
தலசிவைகலுஞ் சுவைமணம்பெறு கிற்கிலாப்
பொன்பொலிந்தசொன் மாலைகொண்டுனைப் போற்றினும்பய
[னென்னையாம்
என்புநெக்குரு கிக்கணீர்சொரிந் தேத்துமெய்விசு வாசமோ
டன்புறழ்ந்தசொற் பாலியென்கவிக் ககிலலோகசர் வேசனே.
|
|
|
| 8. |
பற்றெலாம்பிடு
பட்டபோதினும் பாழ்த்தவென்னகப் பற்றினும்
முற்றுநீங்கல வாகிநின்றெனை முரணிவைகலு மோசஞ்செய்
புற்றராவொடு நாடகழிப்பது புண்ணியாதிரு வுள்ளமேல்
அற்றதாகுக வெற்புரந்தரு ளகிலலோகசர் வேசனே.
|
|
|
| 9. |
உண்டுபட்டவென்
மடமையும்பல வீனமுந்திரு வுள்ளத்தே
கொண்டருட்கும ரேசன்புண்ணிய மொன்றையேகுறிக்
கொன்டெனிற்
கண்டகாண்கிற காணுமென்பிழை யாவையுங்கணக் கேற்றிடா
தண்டர்நாயக பொறுத்திரக்ஷைசெய் யகிலலோகசர் வேசனே.
|
|
|
| 10. |
திமிரநீங்குமுன்
றேகநீங்கியென் ஜீவனம்மையிற் சேரினுங்
குமரநாயகன் றிருவடித்துணை கூட்டியுய்யருட் கொண்டலே
எமரொடுந்தடுத் தாண்டபோரு ளென்றும்வாழிய வாழிய
அமரர்நாயக வாழிவாழிய வகிலலோகசர் வேசனே.
|
|
|
|
அந்திப்பலி
முற்றிற்று
|