பக்கம் எண் :

58

 

தீர்க்க மெய்விசு வாசத்தின் செயலெலாந் தெரிந்தும்
பார்த்தி வற்குமெய்ப் பத்திசெய் பரிசினைப் பார்த்தும்
ஆர்த்தி யிற்பல வாசிகள் வழங்கியங் கவனை
ஊர்த்த லோகத்திற் புகுத்தின ருன்னதத் தரசன்.

29
   
 

பூர்வ பாதையைத் துலக்கிவை திகமுறை புதுக்கி
ஆர்வ மிக்குநன் னெறிப்படு வோர்சுமக் கரிய
தீர்வ ருஞ்சுமை யேற்றிய திருவிதிக் கிழவன்
சீர்வ லந்திகழ் யாத்திரை வரன்முறை தெரிக்கில்.

30
   
 

நாச தேசத்து ராஜ்ஜிய பாரத்தை நச்சான்
ஈசன் மார்க்கத்தன் னினத்தொடு நல்குர வெய்தித்
தேச நாசத்துக் ககறலே நலனெனத் தெரிந்தான்
ஆசி லாத்திருக் கடைபுகூஉ வறநெறி பிடித்தான்.

31
   
 

பேயின் மக்கள்பின் றொடர்ந்திடச் செங்கடல் பிளந்து
வாயி டும்படி கோல்கொடு மடித்தனன் மருங்கைக்
காயும் வெம்மணற் சுரத்திடைத் தவிப்பறக் கடத்தி
நாய கன்வழி நடத்தினன் நாற்பது வருடம்.

32
   
 

வழிம றித்தெதிர்த் தடர்த்தமர் மலைந்தமன் னரையும்
கழிபெ ரும்படைத் திரளையுங் கட்டறுத் தோட்டி
பழிப டாமற்றன் னினத்தரைத் தினம்பரி பாலித்
தெழுது நூல்வலான் கடைப்பிடித் தேகின னென்ப.

33
   
 

ஜீவ நாளெலாந் திவ்விய நகர்செலும் பாதைக்
காவ தாகிய திருப்பணி விடைபுரிந் தமையத்
தாவில் நல்லறச் சாலைமண் டபஞ்சுமை தாங்கி
பாவ நாசசங் கேதங்க ளமைத்தனன் பனவன்.

34
   
 

காண்டி கான்மிதிப் பாயலை கவின்கொள்கா னானை
ஈண்டென் றாண்டகை யுரைத்தலின் மலைமிசை யேறி
மாண்ட லஞ்செறி வளனெலாங் கண்டுள மகிழ்ந்து
சேண்ட லத்திறை திருநக ரடைந்தனன் றீர்க்கன்.

35
 
 

வஞ்சப் பேயொடு மலைந்தம ராடியு மறிந்த
சஞ்ச லப்பொருப் புச்சிமீ தேறியுந் தணவா
வெஞ்சு ரத்துவீழ்ந் தழன்றும்வெந் நிடாதுமுன் னிட்டுத்
துஞ்சு காறுஞ்சென் றுயர்பத மடைந்தனன் ஜோபு.

36